இந்திய சினிமாவின் நாயகன் : மணிரத்னத்தை வாழ்த்திய கமல் | குடும்பத்துடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய இளையராஜா | கீர்த்தி சுரேஷிற்கு அழகு, அறிவு இரண்டுமே இருக்கிறது : கமல் | சார்பட்டா பரம்பரை 2 எப்போது துவங்கும்? | கார்த்தி படத்தில் இணைந்த அரவிந்த்சாமி | மீனவர் கதாபாத்திரத்தில் நாக சைதன்யா | எதிர்நீச்சல் தொடரில் முக்கிய ரோலில் என்ட்ரியாகும் திருச்செல்வம் | அன்பிற்காக மட்டுமே பக்கபலமாக நிற்பவர் விஜய் தேவரகொண்டா : சமந்தா நெகிழ்ச்சி | ஜெயிலர் காமெடி வேற மாதிரி இருக்கும் : யோகிபாபு வெளியிட்ட புது தகவல் | டெவில் படம் மூலம் இசையமைப்பாளரான மிஷ்கின் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு |
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் சமந்தா. சமீப காலங்களில் நாக சைதன்யாவுடன் அவரது திருமண வாழ்க்கை பற்றி பல்வேறு விதமான சர்ச்சைகள் வந்து கொண்டிருக்கின்றன. சில தினங்களுக்கு முன்பு திருப்பதி சென்றிருந்த போது அவரிடம் அது பற்றி கேள்வி கேட்ட நிருபர் ஒருவரையும் 'புத்தி இருக்கா' என கடுமையாகத் திட்டினார். திருப்பதி, காளஹஸ்தி கோயில்களில் சாமி கும்பிட்ட சமந்தா அப்படியே தனது சொந்த ஊரான சென்னைக்கு வந்துள்ளார் எனத் தெரிகிறது.
அவருடைய தோழிகளான நடிகைகள் த்ரிஷா, கீர்த்தி சுரேஷ், கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோருடன் 'வீக் என்ட்'டை கொண்டாடியுள்ளார். “கடந்த வாரம், அற்புதமான ஈவ்னிங்கிற்கு மிக்க நன்றி... த்ரிஷா, கீர்த்தி, கல்யாணி..” என இன்ஸ்டாவில் அவர்களுடன் இருந்த புகைப்படங்கள், வீடியோக்களைப் பகிர்ந்துள்ளார்.
நேற்று ஐதராபாத்தில் சமந்தாவின் கணவர் நாக சைதன்யா, சாய் பல்லவி நடித்துள்ள 'லவ் ஸ்டோரி' படத்தின் வெளியீட்டிற்கு முந்தைய நிகழ்ச்சி நடந்துள்ளது. அந்த விழாவில் சிறப்பு விருந்தினராக சிரஞ்சீவி கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சிக்கு சமந்தா செல்லவில்லை என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று. அந்த நிகழ்ச்சிக்கும் சமந்தா எந்த விதமான வாழ்த்தும் தெரிவிக்கவில்லை.