மீண்டும் விளையாட்டு படத்தை கையில் எடுக்கும் அருண் ராஜா காமராஜ் | ஹிந்தி நடிகர் சதீஷ் ஷா காலமானார் | தனுஷ் தம்பியாக நடிக்க வேண்டியது : விஷ்ணு விஷால் | பிரபாஸ் படத்தில் இணைந்த இளம் நடிகை | ரஜினிகாந்த் எடுத்த புது முடிவு? | எனக்கு ஆர்வம் இல்லை : லியோ படப்பிடிப்பில் மகன் நடிகரிடம் திரிஷா சொன்ன வார்த்தை | பவர்புல்லான சவுண்ட் ஸ்டோரி : விவேக் ஓபராய் | கார் மோதி 3 பேர் விபத்தில் சிக்கிய விவகாரம் : விளக்கம் கூறி சர்ச்சையில் சிக்கிய நடிகை | அரசு மருத்துவமனை பின்னணியில் உருவாகும் 'பல்ஸ்' | ஆள் கடத்தல் வழக்கை ரத்து செய்ய லட்சுமி மேனன் மனுதாக்கல் |

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் சமந்தா. சமீப காலங்களில் நாக சைதன்யாவுடன் அவரது திருமண வாழ்க்கை பற்றி பல்வேறு விதமான சர்ச்சைகள் வந்து கொண்டிருக்கின்றன. சில தினங்களுக்கு முன்பு திருப்பதி சென்றிருந்த போது அவரிடம் அது பற்றி கேள்வி கேட்ட நிருபர் ஒருவரையும் 'புத்தி இருக்கா' என கடுமையாகத் திட்டினார். திருப்பதி, காளஹஸ்தி கோயில்களில் சாமி கும்பிட்ட சமந்தா அப்படியே தனது சொந்த ஊரான சென்னைக்கு வந்துள்ளார் எனத் தெரிகிறது.
அவருடைய தோழிகளான நடிகைகள் த்ரிஷா, கீர்த்தி சுரேஷ், கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோருடன் 'வீக் என்ட்'டை கொண்டாடியுள்ளார். “கடந்த வாரம், அற்புதமான ஈவ்னிங்கிற்கு மிக்க நன்றி... த்ரிஷா, கீர்த்தி, கல்யாணி..” என இன்ஸ்டாவில் அவர்களுடன் இருந்த புகைப்படங்கள், வீடியோக்களைப் பகிர்ந்துள்ளார்.
நேற்று ஐதராபாத்தில் சமந்தாவின் கணவர் நாக சைதன்யா, சாய் பல்லவி நடித்துள்ள 'லவ் ஸ்டோரி' படத்தின் வெளியீட்டிற்கு முந்தைய நிகழ்ச்சி நடந்துள்ளது. அந்த விழாவில் சிறப்பு விருந்தினராக சிரஞ்சீவி கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சிக்கு சமந்தா செல்லவில்லை என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று. அந்த நிகழ்ச்சிக்கும் சமந்தா எந்த விதமான வாழ்த்தும் தெரிவிக்கவில்லை.