பிளாஷ்பேக்: ஏ வி எம் - விஜயகாந்த் கூட்டணியின் முதல் வெற்றித் திரைப்படம் “சிவப்பு மல்லி” | எங்கேயும் போக மாட்டேன், 13 வருட காத்திருப்பு போதும் : இயக்குனருக்கு உறுதி அளித்த பார்வதி | ரஜினி, தனுஷுக்கு அடுத்ததாக பிரதீப் ரங்கநாதனை பார்க்கிறேன் ; நாகார்ஜுனா | 'ஏஜென்ட் மிர்ச்சி' ; ஸ்ரீ லீலாவின் முதல் பாலிவுட் பட லுக் வெளியானது | ‛அங்கமாலி டைரீஸ்' பட இயக்குனரின் ஹிந்தி படத்திற்கு இசையமைக்கும் ஏ.ஆர் ரஹ்மான் | ராஜா சாப் பட இயக்குனருக்கு விஎப்எக்ஸ் சூப்பர்வைசர் மிரட்டல் ; தயாரிப்பாளர் வெளியிட்ட பகீர் தகவல் | இசையமைப்பாளர் இளையராஜா அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் | பூஜா ஹெக்டேவின் பிறந்த நாளில் 'ஜனநாயகன்' படக்குழு வெளியிட்ட போஸ்டர்! | 'டியூட்' படத்திற்காக இரவு முழுக்க தூங்காமல் பயிற்சி எடுத்த மமிதா பைஜு! | அல்லு அர்ஜுனை தொடர்ந்து 'கேஜிஎப்' நாயகன் யஷை இயக்கும் அட்லி! |
தமிழில் நிலா என்ற பெயரில் அன்பே ஆருயிரே, ஜாம்பவான், லீ, ஜெகன் மோகினி, இசை, கில்லாடி, உள்பட பல படங்களில் நடித்தவர் பாலிவுட் நடிகை மீரா சோப்ரா. தற்போது நாஸ்டிக், மொலி பூவு படங்களில் நடித்து வருகிறார்.
மும்பை தானே பகுதியில் வசித்து வரும் மீரா சோப்ரா, போலியான அடையாள அட்டையை காட்டி கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட தகவல் தற்போது வெளியாகி உள்ளது. தானே மாநகராட்சியின் பார்க்கிங் பிளாசா கொரோனா தடுப்பூசி முகாமில் அவர் தடுப்பூசி போட்டிருக்கிறார். இங்கு 50 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்படாத நிலையில் மருத்துவ பணியாளர் போன்ற அடையாள அட்டையை காட்டி தடுப்பூசி போட்டுள்ளார்.
அந்த அடையாள அட்டை இணையதளத்தில் வெளியானது. இதுகுறித்து தனது டுவிட்டரில், நான் ஆதார் கார்டை பதிவேற்றி முன்பதிவு செய்து அதன்படியே தடுப்பூசி போட்டுக் கொண்டதாக கூறியுள்ளார். இதற்கு பதிலிளித்துள்ள மாநகராட்சி அதிகாரி ஒருவர். தடுப்பூசி போட முன்பதிவு செய்ய ஆதார் கார்டு போதுமானது. ஆனால் 18 வயது முதல் 44 வயது வரை உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடாத இடத்தில் முன்கள பணியாளர்களுக்கு மட்டுமே வயது வித்தியாசம் இன்றி தடுப்பூசி போடப்படும். அதற்கு அவர்கள் ஆதார் தவிர்த்து முன்கள பணியாளருக்கான அடையாள அட்டையை காட்ட வேண்டும். என்று பதில் அளித்திருக்கிறார்.
மீரா சோப்ரா போலியான அடையாள அட்டை கொடுத்து தடுப்பூசி போட்டுக் கொண்டாரா என்ற விசாரணையை மும்பை மாநகராட்சி முடுக்கி விட்டுள்ளது.