ரவிதேஜாவின் 76வது படம் ரிலீஸ் தேதியுடன் அறிவிப்பு | நடிகர் விநாயகனின் விமர்சனத்திற்கு நடிகர் சலீம் குமாரின் மகன் பதில் | தனுஷ் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் கிர்த்தி சனோன் | புதிய ஆரம்பம் - நடிகர் கிருஷ்ணா இரண்டாவது திருமணம் | பிரித்விராஜ் படத்திலிருந்து நீக்கப்பட்டேன் ; ஜோஜூ ஜார்ஜ் | மகளுக்கு டைட்டில் கார்டில் இடம் கொடுத்த மணிரத்னம் ; நன்றி சொன்ன குஷ்பு | 'கல்கி 2' படத்திலிருந்தும் தீபிகா படுகோனே விலகல்? | இந்தியன் 2 படத்தை விட குறைவாக வசூலித்த தக் லைப் | மீண்டும் தள்ளிப் போகும் 'ஹரிஹர வீர மல்லு' | சிம்பு படத்தை இயக்குகிறாரா வெற்றிமாறன்? |
தமிழில் நிலா என்ற பெயரில் அன்பே ஆருயிரே, ஜாம்பவான், லீ, ஜெகன் மோகினி, இசை, கில்லாடி, உள்பட பல படங்களில் நடித்தவர் பாலிவுட் நடிகை மீரா சோப்ரா. தற்போது நாஸ்டிக், மொலி பூவு படங்களில் நடித்து வருகிறார்.
மும்பை தானே பகுதியில் வசித்து வரும் மீரா சோப்ரா, போலியான அடையாள அட்டையை காட்டி கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட தகவல் தற்போது வெளியாகி உள்ளது. தானே மாநகராட்சியின் பார்க்கிங் பிளாசா கொரோனா தடுப்பூசி முகாமில் அவர் தடுப்பூசி போட்டிருக்கிறார். இங்கு 50 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்படாத நிலையில் மருத்துவ பணியாளர் போன்ற அடையாள அட்டையை காட்டி தடுப்பூசி போட்டுள்ளார்.
அந்த அடையாள அட்டை இணையதளத்தில் வெளியானது. இதுகுறித்து தனது டுவிட்டரில், நான் ஆதார் கார்டை பதிவேற்றி முன்பதிவு செய்து அதன்படியே தடுப்பூசி போட்டுக் கொண்டதாக கூறியுள்ளார். இதற்கு பதிலிளித்துள்ள மாநகராட்சி அதிகாரி ஒருவர். தடுப்பூசி போட முன்பதிவு செய்ய ஆதார் கார்டு போதுமானது. ஆனால் 18 வயது முதல் 44 வயது வரை உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடாத இடத்தில் முன்கள பணியாளர்களுக்கு மட்டுமே வயது வித்தியாசம் இன்றி தடுப்பூசி போடப்படும். அதற்கு அவர்கள் ஆதார் தவிர்த்து முன்கள பணியாளருக்கான அடையாள அட்டையை காட்ட வேண்டும். என்று பதில் அளித்திருக்கிறார்.
மீரா சோப்ரா போலியான அடையாள அட்டை கொடுத்து தடுப்பூசி போட்டுக் கொண்டாரா என்ற விசாரணையை மும்பை மாநகராட்சி முடுக்கி விட்டுள்ளது.