சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள் என பல சினிமா பிரபலங்கள் வேண்டுகோள் விடுத்த வண்ணம் உள்ளனர். சில வாட்சப் குழுக்கள், சமூக வலைத்தளங்களில் சிலர் தடுப்பூசி பற்றிய தவறான தகவல்களைத் தெரிவித்து மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர். படித்தவர்கள் கூட அது பற்றிய குழப்பமான மனநிலையில் உள்ளனர்.
திரையுலகில் தினமும் ஒருவராவது கொரோனா பாதிப்பு காரணமாக மரணமடைந்து வருவது திரையுலகினரை அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது. கொரோனா தொற்று காரணமாக இன்று மரணமடைந்த நடிகர் வெங்கட் சுபா தடுப்பூசி போட்டுக் கொள்ள பெரிதும் தயக்கம் காட்டி உள்ளார். அது பற்றி அவரது 30 ஆண்டு கால நண்பரும், தயாரிப்பாளருமான டி.சிவா கவலையுடன் இரங்கல் பதிவிட்டுள்ளார்.
நடிகர் சத்யராஜ் கூட இன்று வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் மக்கள் அனைவரும் அவரவர் டாக்டரை அணுகி ஆலோசனை பெற்று தடுப்பூசி எடுத்துக் கொள்ள முன்வர வேண்டும், நான் சொல்கிறேன் என்று கூட போட்டுக் கொள்ள வேண்டாம், டாக்டர்களை ஆலோசித்து போட்டுக் கொள்ளுங்கள் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
தடுப்பூசி போடுவதன் மூலம் தொற்றிலிருந்து நிச்சயம் காப்பாற்றிக் கொள்ள முடியும் என பல டாக்டர்கள் ஏற்கெனவே தெரிவித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.