தமிழ் இயக்குனர்களைக் கவர்ந்த நாகார்ஜுனா 'ஹேர்ஸ்டைல்' | ஓடிடியில் நேரடி படங்கள், வெப் தொடர்கள் அறிவிப்பு | நடிப்பில் விக்ரமை வெல்ல தொடர்ந்து போராடுவேன்: துருவ் விக்ரம் | அம்மாவின் பச்சை நிற கண்ணை பெற்ற அழகான மகள்: அக்ஷராவுக்கு கமல் பிறந்த நாள் வாழ்த்து | பிளாஷ்பேக்: கதை நாயகனாக முதல் படத்தில் தோற்ற எஸ்.எஸ்.ராஜேந்திரன் | நாற்று நட்டேன், செங்கல் சூளையில் வேலை செய்தேன்: அனுபமா பரமேஸ்வரன் | 35 நாளில் முடிந்த 'டூரிஸ்ட் பேமிலி' அபிஷன் படம் | உதவி செய்பவர்களை காயப்படுத்தாதீர்கள்: 'துள்ளுவதோ இளமை' அபிநய் | 'டீசல்' படப்பிடிப்பில் ஹரிஷ் கல்யாணை அதிர வைத்த மீனவர் | கிறிஸ்துமஸ் ரிலீஸாக வெளியாகும் நிவின்பாலியின் 'சர்வம் மாயா' |
சினிமாவில் எவ்வளவு வளர்ந்தாலும் தன்னடக்கத்துடன் இருக்கும் நடிகர்கள், நடிகைகள் ஒரு சிலர் தான். ஓரிரு படங்களில் நடித்த உடனே தனி மேனேஜர், பிஆர்ஓ என வைத்துக் கொண்டு தாம் தூம் என அட்டகாசம் செய்யும் நடிகர்கள், நடிகைகளும் இருக்கிறார்கள்.
'சிறைவாசி' படத்தில் வில்லன்களில் ஒருவராக நடித்த மகாபாரதப் பஞ்ச பாண்டவர்களில் ஒருவர் பெயரைக் கொண்ட நடிகர் ஓரிரு படங்களில்தான் நடித்துள்ளார். ஆனால், அதற்குள்ளாகவே அவரைத் தொடர்பு கொண்டால் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருக்கிறார் என்று தான் பதில் வருகிறதாம்.
'ஆசிரியர்' படத்தில் நடித்த பிறகும் தற்போது ஒரு படத்தில் நாயகனாக நடித்த பின்னும் இப்போதே தன்னை டாப் நடிகர்களில் ஒருவர் என நினைத்துக் கொண்டுள்ளாராம். இப்படியான பலரை தமிழ் சினிமா உலகம் பார்த்துவிட்டது. இப்படி ஆட்டம் போட்ட பலர் கடைசியில் சினிமாவைவிட்டே அப்பால் போய்விட்டார்கள் என்று அந்த நடிகரை நினைத்து சிலர் வருத்தப்படுகிறார்கள். புரிந்து கொள்வாரா நடிகர் ?.