தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சினிமாவில் எவ்வளவு வளர்ந்தாலும் தன்னடக்கத்துடன் இருக்கும் நடிகர்கள், நடிகைகள் ஒரு சிலர் தான். ஓரிரு படங்களில் நடித்த உடனே தனி மேனேஜர், பிஆர்ஓ என வைத்துக் கொண்டு தாம் தூம் என அட்டகாசம் செய்யும் நடிகர்கள், நடிகைகளும் இருக்கிறார்கள்.
'சிறைவாசி' படத்தில் வில்லன்களில் ஒருவராக நடித்த மகாபாரதப் பஞ்ச பாண்டவர்களில் ஒருவர் பெயரைக் கொண்ட நடிகர் ஓரிரு படங்களில்தான் நடித்துள்ளார். ஆனால், அதற்குள்ளாகவே அவரைத் தொடர்பு கொண்டால் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருக்கிறார் என்று தான் பதில் வருகிறதாம்.
'ஆசிரியர்' படத்தில் நடித்த பிறகும் தற்போது ஒரு படத்தில் நாயகனாக நடித்த பின்னும் இப்போதே தன்னை டாப் நடிகர்களில் ஒருவர் என நினைத்துக் கொண்டுள்ளாராம். இப்படியான பலரை தமிழ் சினிமா உலகம் பார்த்துவிட்டது. இப்படி ஆட்டம் போட்ட பலர் கடைசியில் சினிமாவைவிட்டே அப்பால் போய்விட்டார்கள் என்று அந்த நடிகரை நினைத்து சிலர் வருத்தப்படுகிறார்கள். புரிந்து கொள்வாரா நடிகர் ?.