தெலுங்கில் ரீமேக் ஆகும் 'லப்பர் பந்து' | ஆர்யாவிற்கு ஜோடியாகும் அனுபமா பரமேஸ்வரன்! | 'ஸ்பிரிட்' படத்தில் சிரஞ்சீவி? சந்தீப் ரெட்டி வங்காவின் பதில் இதோ! | கமல், ரஜினி இணையும் படம்: டிசம்பர் 12ல் அறிவிக்கப்படுமா? | எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை: ராஜமவுலி பேச்சால் புது சர்ச்சை | கதைநாயகன் ஆனார் மொட்டை ராஜேந்திரன்: தனது பிடிவாதத்தை தளர்ப்பாரா? | எங்கள் மண வாழ்க்கை ரகசியம் - 'சரிம்மா, சாரிம்மா': நடிகை ரோஜா | ஆஸ்கருக்கு செல்லும் 2 தமிழ் படங்கள் | 8 வருடங்களுக்கு பிறகு தமிழ் திரையில் ருஹானி சர்மா | தேர்தல் கமிஷன் தூதர் பதவியில் இருந்து நீது சந்திரா நீக்கம் |

முன்னணியில் இருக்கும் அந்த நடிகர் கடன் சுமையில் இருக்கிறாராம். தான் நடித்த படங்கள் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில் தயாரிப்பாளர்களின் கடனுக்கு ஜாமீன் கையெழுத்து போட்டது. சம்பளத்தை விட்டுக் கொடுத்தது என எல்லாம் சேர்ந்து பெரும் தொகை கடனாக நிற்கிறதாம். கொரோனா காலம் வராமல் போயிருந்தால் அடுத்தடுத்த படங்களை வெளியிட்டு சமாளித்திருப்பார். இப்போது படங்கள் முடங்கி கிடக்கிறது, கடன் வளர்ந்து நிற்கிறது.
அவரின் இந்த நிலையை புரிந்து கொண்ட ஒரு சேனல் நிறுவனம். எங்கள் நிறுவனத்துக்கு அடுத்தடுத்து 5 படங்கள் நடித்துக் கொடுங்கள். ஒரு படத்துக்கு 15 கோடி சம்பளம் வீதம் 75 கோடியை மொத்தமாக வாங்கிக் கொள்ளுங்கள் என்று டீல் பேசியதாம். நடிகரும் தற்போதைய சூழலுக்கு இது தான் வழி என ஒப்புக்கொண்டாராம் . படத்தின் கதை, இயக்குனர், ஹீரோயின் என தயாரிப்பு தரப்பு தான் முடிவு செய்ய பேகிறதாம்.