டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் நடிகர் நடிகைகள் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று கூறி வீடியோ பதிவுகளை வெளியிட்டு வருகிறார்கள். காமெடி நடிகர் வடிவேலு அவ்வப்போது தன் பாணியில் காமெடியாக பேசி வீடியோ வெளியிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்துவார். இந்த நிலையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது:
கொரோனாவால் பீதிக்கு மேல பீதி ஏற்பட்டிருக்கு. வெளியே போக கூடாது. யாரையும் தொட்டு பேசக்கூடாது. கை கொடுக்க கூடாதுன்னு சொல்றாய்ங்க. நம்ம கையவே ஒண்ணா சேத்து கும்பிடுறதுக்கு பயமா இருக்கு. மருத்துவ உலகத்தையும் மனித உலகத்தையும் மிரட்டி வைத்துள்ளது கொரோனா. இந்த மாதிரி யாருமே பார்த்தது இல்லை.
என்னிடம் ஒரு அம்மா எப்போது நடிக்க போகிறீர்கள் என்று கேட்டார். இப்போது நடிக்க வருவதற்கும் படம் எடுப்பதற்கும் யாரும் தயாராக இல்லை. படம் பார்க்க வருவதற்கும் யாரும் தயாராக இல்லை. அப்புறம் எப்படி நான் தனியாக போய் நடிப்பது.
இறைவன் கொரோனா என்ற ஒரு படத்தை ரிலீஸ் செய்து இருக்கிறான். அந்த படத்தையும் வீட்டுக்குள்ளேயே இருந்து பார்க்க சொல்லியிருக்கான். கொரோனா படத்தை இறைவன் எப்போது தூக்குவான் என்றே தெரியவில்லை. அதை தூக்கினால்தான் எல்லோரும் வெளியே வர முடியும்.
ஒரு படத்தில் சும்மா உட்காருவது எவ்வளவு கஷ்டம் என்று காமெடியாக நடித்து இருந்தேன். ஆனால் உண்மையிலேயே சும்மா உட்கார்ந்தால் எப்படி இருக்கும் என்று எல்லோரையும் உணர வைத்து இருக்கிறான் இறைவன். பயம் வேண்டாம். கொரோனாவை எல்லோரும் சேர்ந்து, அரசு சொல்வதை கேட்டு வீட்டை விட்டு வெளியே வராமல் தொட்டு பேசாமல் வெல்வோம்.
மாமன் மச்சானை பார்த்தாலும் மச்சான், மாப்ளேன்னு கட்டிப்புடிச்சிடுதாதீங்க. வீட்டுல சும்மா உட்கார்ந்து மூலிகைகளை போட்டு லெமன் டீ குடிங்க, ஆவி புடிங்க.
இவ்வாறு வடிவேலு பேசி இருக்கிறார்.




