ஆர்யாவின் ‛அனந்தன் காடு' | விஜய்யை தொடர்ந்து தனுஷை இயக்கும் வினோத் | ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை காண முடியாமல் போனவருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு | துருவ நட்சத்திரம் : சிம்ரன் அளித்த உறுதி | குபேரா படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு | பிளாஷ்பேக்: விஜயகாந்த் நடிக்க மறுத்து, மம்மூட்டி நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் | தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான் | வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் |
கடந்த 2017ம் ஆண்டு கமல்ஹாசன் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டி ஒன்றில் மகாபராதம் குறித்து சில சர்ச்சையான கருத்துக்களை கூறியிருந்தார். அதற்கு அப்போதே பலத்த எதிர்ப்பு ஏற்பட்டது.
இந்த பிரச்சினை தொடர்பாக நெல்லை மாவட்டம் பழவூரைச் சேர்ந்த ஆதிநாத சுந்தரம் என்பவர் வள்ளியூர் நிதீமன்றத்தில் கமல்ஹாசன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நடந்து வரும் நிலையில். வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று கமல்ஹாசன் மதுரை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதனால் வழக்கை வள்ளியூர் நீதிமன்றம் விசாரிக்க மதுரை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்திருந்தது.
இந்த நிலையில் நேற்று இந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது கமல் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் "இனி இதுபோன்ற சர்ச்சைகள் எதிர்காலத்தில் நிகழாது என்று உறுதி அளிக்கிறோம்" என்று மனுதாக்கல் செய்தார். இதனை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் கமல்ஹாசன் மீதான வழக்கை தள்ளுபடி செய்து உத்தவிட்டது.