சினிமாவில் எதுவும் நிரந்தரமில்லை! : நந்திதா | அனுஷ்கா பிறந்தநாளில் வெளியான 'கதனார்' படத்தின் அழகிய போஸ்டர்! | யஷ் படத்துடன் மோதுவதில் பயமில்லை : தெலுங்கு இளம் ஹீரோ தில் பேச்சு | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்திலிருந்து வெளியான பிரித்விராஜ் முதல்பார்வை | கமலின் 'நாயகன்' படத்தின் ரீரிலீஸுக்கு தடை விதிக்க மறுத்த நீதிமன்றம்! | கத்ரினா கைப் - விக்கி கவுஷல் நட்சத்திர தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது! | உருவக்கேலி செய்ததாக நடிகை கவுரி கிஷன் வேதனை | கமல் 237வது படத்தில் இணைந்த தொழில்நுட்ப கலைஞர்கள் | எனது பேட்டியை விஜய்க்கு எதிராக கட்டமைக்க முயற்சிக்காதீங்க : அஜித் | தெலுங்கிலும் இன்று வெளியான பிரணவ் மோகன்லால் ஹாரர் படம் |

கொரோனா இரண்டாவது அலை இந்தியா முழுவதும் தீவிரம் அடைந்து வரும் நிலையில் அரசாங்கம் விடுத்த வேண்டுகோளின்படி பலரும் முதல் கட்ட தடுப்பூசி போட்டுக்கொண்டு, இரண்டாவது தடுப்பூசி போடவும் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால் சிலரோ தடுப்பூசி குறித்து அச்சம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் மும்பையில் வசிக்கும் நடிகை நதியா, பொதுமக்களுக்கு இதுகுறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இரண்டாவது டோஸ் தடுப்பூசியையும் தற்போது போட்டுக் கொண்டுள்ளார்.
இதுபற்றி அவர் கூறும்போது, “மும்பை நகராட்சி மருத்துவமனையில் ராஜ மரியாதையுடன் இரண்டாவது டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டேன். மருத்துவ சுகாதார பணியாளர்களும், களப்பணியாளர்களும் ஓய்வில்லாமல், சுயநலமில்லாமல் இந்த தேசத்துக்காக பணியாற்றுவதை பார்க்கும்போது மிகவும் பெருமையாக இருக்கிறது. மும்பை மாநகராட்சிக்கு ஹேட்ஸ் ஆப். தயவுசெய்து அனைவரும் தடுப்பூசி எடுத்துக்கொண்டு உங்களையும் உங்களை சுற்றியுள்ளவர்களையும் பாதுகாப்பாக வைத்திருங்கள்” என்று கேட்டுக்கொண்டுள்ளார் நதியா.
![]() |