மனைவியின் பிரிவால் ஒன்றரை ஆண்டு தினந்தோறும் குடித்தேன் : அமீர்கான் | கண்ணப்பா படத்தை இயக்க தெலுங்கு இயக்குனர்கள் முன் வரவில்லை : விஷ்ணு மஞ்சு ஓப்பன் டாக் | சென்சாருக்கு எதிராக மலையாள திரையுலகினர் நடத்திய நூதன போராட்டம் | நீ பிரச்னைக்குரியவன் அல்ல : வில்லன் நடிகருக்கு மம்முட்டி சொன்ன அட்வைஸ் | யோகி பாபு, ரவி மோகன் படம் ஆகஸ்ட்டில் துவக்கம் | விஜய் சேதுபதி, பூரி ஜெகந்நாத் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது | சாலைக்கு எம்.எஸ்.வி. பெயர் : முதல்வருக்கு நன்றி கூறி மகன் உருக்கம் | என் 5 படங்களின் கதைகளையும் முதலில் இந்த ஹீரோவிடம் தான் கூறினேன் : வெங்கி அட்லூரி | ‛பிளாக்மெயில்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | என் தந்தைக்கு புல் மீல்ஸ்... எனக்கு ஒரு ஸ்பூன் சாதம் : சல்மான்கான் சொன்ன டயட் ரகசியம் |
கொரோனாவின் இரண்டாவது அலைக்கு திரையுலகினர் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன் தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து டுவிட்டரில், ‛‛எனக்கு கொரோனா பாசிட்டிவ் என வந்துள்ளது. என் வீட்டில் என்னை நானே தனிமைப்படுத்தி, தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளேன். என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் உடனே பரிசோதனை செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன். அனைவரும் வீட்டிலேயே பாதுகாப்பாக இருங்கள். தக்க தருணத்தில் தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள். நான் நலமாக உள்ளேன், பயப்பட ஒன்றும் இல்லை என பதிவிட்டுள்ளார்.
அல்லு அர்ஜூன் தற்போது சுகுமார் இயக்கத்தில் ‛புஷ்பா என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படம் தென்னிந்திய மற்றும் ஹிந்தி மொழிகளில் வெளியாக உள்ளது.