லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‛கைதி -2' படத்தில் நடிக்கவில்லை! -அனுஷ்கா மறுப்பு | திரில்லர் கதையை படமாக்கும் பிரேம்குமார்! பிரதீப் ரங்கநாதன் நடிக்கிறார்!! | கமலின் 237வது படம் டிராப் ஆகிவிட்டதா? | சண்முக பாண்டியன் நடித்துள்ள ‛படை தலைவன்' படத்தின் இரண்டு நாள் வசூல் எவ்வளவு? | ஸ்ரீ லீலாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து சுதா கொங்கரா வெளியிட்ட வீடியோ! | எம்.பி.,யான கமல்ஹாசன்; சினிமா வளர்ச்சிக்காக குரல் கொடுப்பாரா? | நல்ல கதைக்காக காத்திருக்கும் ஜோதிகா | அடுத்த படத்துல ஹீரோயின் உண்டா? சண்முக பாண்டியன் பதில் | ஜனநாயகன் பட இசை வெளியீட்டு விழா நடக்குமா? | விஜய் மில்டன் இயக்கத்தில் இரண்டாம் முறையாக இணைந்த அம்மு அபிராமி! |
கொரோனா இரண்டாவது அலை கடந்த ஆண்டை விட தீவிரமாக பரவிக்கொண்டு வருவதால் சினிமாத் துறையினர் முன்பை விட அதிகமானோர் நோய் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். இந்த நிலையில், தான் கமிட்டான படங்களில் தொடர்ந்து நடிப்பதற்கு தெலுங்கு நடிகர் ஜெகபதிபாபு மறுத்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
தற்போது தமிழில் லாபம் படத்தில் நடித்து முடித்துள்ள ஜெகபதிபாபு, ரஜினியுடன் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கில் அரை டஜன் படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில், சித்தார்த்-சர்வானந்த் நடிப்பில் தமிழ் தெலுங்கில் தயாராகி வரும் மகாசமுத்ரம் படத்தில் வில்லனாக நடித்து வந்தார் ஜெகபதிபாபு.
ஆனால் தற்போது அப்படத்தின் படப்பிடிப்பு வைசாக்கில் நடந்து வரும் நிலையில், தன்னை படப்பிடிப்பில் கலந்து கொள்ள அழைத்தபோது கொரோனா தொற்றை முன்வைத்து படப்பிடிப்பில் கலந்து கொள்ள முடியாது என்று தயாரிப்பாளர்களின் கோரிக்கை நிராகரித்து விட்டாராம் ஜெகபதிபாபு. அதேபோல் தான் நடிக்கும் மற்ற படங்களின் படப்பிடிப்புகளிலும் கொரோனா அலை ஓய்ந்த பிறகே நடிப்பேன் என்றும் ஜெகபதிபாபு கூறிவிட்டதாக டோலிவுட்டில் செய்திகள் வெளியாகியுள்ளன.