தமிழ் சினிமாவில் இறங்கு முகமான ஓடிடி வியாபாரம் | ஜீவன் இல்லாத கதாபாத்திரங்களை தவிர்க்கிறேன்: பவ்யா திரிகா | வாட்ஸ்-அப்பில் வந்த லிங்க்கால் ஹேக் ஆன போன் : அபிஷேக் எச்சரிக்கை | கிங் படப்பிடிப்பில் ஷாரூக்கான் காயம் | ஒவ்வொரு தவறும் பாடம் கற்பிக்கிறது : தமன்னாவின் தத்துவப் பதிவு | ஸ்டன்ட் நடிகர் உயிரிழப்பு எதிரொலி : அக்ஷய்குமார் செய்த அருமையான செயல் | ஜூலை 22ல் கூலி படத்தின் மூன்றாவது பாடல் ரிலீஸ் | அடுத்த நல்ல வசூலுக்கு 80 நாட்களாகக் காத்திருக்கும் தமிழ் சினிமா | அடுத்து அஜித் படமா... : ஆதிக்ரவிச்சந்திரன் பதில் | டாப் 10… முதல் இரண்டு இடங்களில் 'குபேரா' |
‛சகாப்தம், மதுரை வீரன்' படங்களை அடுத்து சண்முக பாண்டியன் நடித்து திரைக்கு வந்துள்ள படம் ‛படை தலைவன்'. அவருடன் யாமினி சந்தர், கஸ்தூரிராஜா, எம்.எஸ்.பாஸ்கர், முனீஸ் காந்த், யோகி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்திருக்கிறார். இந்த படத்தில் நடிகர் விஜயகாந்தை ஏஐ தொழில் நுட்பம் மூலம் மீண்டும் திரையில் கொண்டு வந்துள்ளார்கள்.
‛ரேக்ளா, வால்டர்' போன்ற படங்களை இயக்கிய அன்பு இயக்கியுள்ள இந்த படம் தமிழகம் முழுக்க 500 தியேட்டர்களில் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் இப்படம் முதல் நாளில் 1.30 கோடி வசூலித்த நிலையில், நேற்று இரண்டாம் நாளில் 1.22 கோடி வசூலித்து இருக்கிறது. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் முதல் இரண்டு தினங்களை விட அதிகமாக வசூலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.