தமிழ் சினிமாவில் இறங்கு முகமான ஓடிடி வியாபாரம் | ஜீவன் இல்லாத கதாபாத்திரங்களை தவிர்க்கிறேன்: பவ்யா திரிகா | வாட்ஸ்-அப்பில் வந்த லிங்க்கால் ஹேக் ஆன போன் : அபிஷேக் எச்சரிக்கை | கிங் படப்பிடிப்பில் ஷாரூக்கான் காயம் | ஒவ்வொரு தவறும் பாடம் கற்பிக்கிறது : தமன்னாவின் தத்துவப் பதிவு | ஸ்டன்ட் நடிகர் உயிரிழப்பு எதிரொலி : அக்ஷய்குமார் செய்த அருமையான செயல் | ஜூலை 22ல் கூலி படத்தின் மூன்றாவது பாடல் ரிலீஸ் | அடுத்த நல்ல வசூலுக்கு 80 நாட்களாகக் காத்திருக்கும் தமிழ் சினிமா | அடுத்து அஜித் படமா... : ஆதிக்ரவிச்சந்திரன் பதில் | டாப் 10… முதல் இரண்டு இடங்களில் 'குபேரா' |
‛விக்ரம்' படத்திற்கு பிறகு கமல்ஹாசன் நடித்து திரைக்கு வந்த ‛இந்தியன்-2, தக்லைப்' என்ற இரண்டு படங்களுமே தோல்வி அடைந்துவிட்ட நிலையில், அடுத்தபடியாக ஸ்டன்ட் இயக்குனர்கள் அன்பறிவ் இயக்கத்தில் நடிக்க இருந்த தனது 237வது படத்தை கமல்ஹாசன் கிடப்பில் போட்டு விட்டதாக ஒரு தகவல் சோசியல் மீடியாவில் பரவி வருகிறது.
இந்நிலையில் அது குறித்து ராஜ்கமல் பிலிம்ஸ் வட்டாரத்தை அணுகி விசாரித்த போது, ஒரு புதிய தகவல் கிடைத்தது. அதாவது, தக்லைப் படத்தை அடுத்து அன்பறிவ் இயக்கும் படத்தில் கமல்ஹாசன் நடிப்பதில் எந்தவிதமான மாற்றமும் இல்லை. தற்போது இந்த படத்தின் ஸ்கிரிப்ட் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அடுத்த மாதம் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கப்பட்டு, ஆகஸ்ட் மாதத்தில் இருந்து படப்பிடிப்பு தொடங்குகிறது. அதிரடியான ஆக்சன் கதையில் உருவாகும் இந்த படத்துக்காக கமல்ஹாசன் பெரிய அளவில் தலையில் முடி வளர்த்து புதிய கெட்டப்பில் நடிக்க இருப்பதாகவும் கூறுகிறார்கள்.