தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

‛விக்ரம்' படத்திற்கு பிறகு கமல்ஹாசன் நடித்து திரைக்கு வந்த ‛இந்தியன்-2, தக்லைப்' என்ற இரண்டு படங்களுமே தோல்வி அடைந்துவிட்ட நிலையில், அடுத்தபடியாக ஸ்டன்ட் இயக்குனர்கள் அன்பறிவ் இயக்கத்தில் நடிக்க இருந்த தனது 237வது படத்தை கமல்ஹாசன் கிடப்பில் போட்டு விட்டதாக ஒரு தகவல் சோசியல் மீடியாவில் பரவி வருகிறது.
இந்நிலையில் அது குறித்து ராஜ்கமல் பிலிம்ஸ் வட்டாரத்தை அணுகி விசாரித்த போது, ஒரு புதிய தகவல் கிடைத்தது. அதாவது, தக்லைப் படத்தை அடுத்து அன்பறிவ் இயக்கும் படத்தில் கமல்ஹாசன் நடிப்பதில் எந்தவிதமான மாற்றமும் இல்லை. தற்போது இந்த படத்தின் ஸ்கிரிப்ட் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அடுத்த மாதம் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கப்பட்டு, ஆகஸ்ட் மாதத்தில் இருந்து படப்பிடிப்பு தொடங்குகிறது. அதிரடியான ஆக்சன் கதையில் உருவாகும் இந்த படத்துக்காக கமல்ஹாசன் பெரிய அளவில் தலையில் முடி வளர்த்து புதிய கெட்டப்பில் நடிக்க இருப்பதாகவும் கூறுகிறார்கள்.