லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‛கைதி -2' படத்தில் நடிக்கவில்லை! -அனுஷ்கா மறுப்பு | திரில்லர் கதையை படமாக்கும் பிரேம்குமார்! பிரதீப் ரங்கநாதன் நடிக்கிறார்!! | கமலின் 237வது படம் டிராப் ஆகிவிட்டதா? | சண்முக பாண்டியன் நடித்துள்ள ‛படை தலைவன்' படத்தின் இரண்டு நாள் வசூல் எவ்வளவு? | ஸ்ரீ லீலாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து சுதா கொங்கரா வெளியிட்ட வீடியோ! | எம்.பி.,யான கமல்ஹாசன்; சினிமா வளர்ச்சிக்காக குரல் கொடுப்பாரா? | நல்ல கதைக்காக காத்திருக்கும் ஜோதிகா | அடுத்த படத்துல ஹீரோயின் உண்டா? சண்முக பாண்டியன் பதில் | ஜனநாயகன் பட இசை வெளியீட்டு விழா நடக்குமா? | விஜய் மில்டன் இயக்கத்தில் இரண்டாம் முறையாக இணைந்த அம்மு அபிராமி! |
விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் ‛96' என்ற படத்தை இயக்கிய பிரேம் குமார், அதன்பிறகு அரவிந்த்சாமி, கார்த்தி நடிப்பில் ‛மெய்யழகன்' படத்தை இயக்கினார். இந்த நிலையில், அடுத்தபடியாக மீண்டும் விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் 96 படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குவதற்கு திட்டமிட்டிருப்பதாக ஏற்கனவே கூறியிருந்தார் பிரேம் குமார். ஆனால் சமீபத்தில், 96 படத்தின் இரண்டாம் பாகத்தை பிரதீப் ரங்கநாதனை வைத்து அவர் இயக்கப் போவதாக ஒரு புதிய செய்தி பரவி வந்தது.
இதுகுறித்து பிரேம்குமார் தரப்பில் வெளியாகியுள்ள ஒரு செய்தியில், தற்போது அவர் ஒரு திரில்லர் படத்தை இயக்க திட்டமிட்டுள்ளார். அந்த படத்தில்தான் பிரதீப் ரங்கநாதன் நடிக்கப்போகிறார். அது சம்பந்தமாக அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்கள். மற்றபடி, 96 படத்தின் அடுத்த பாகத்தில் முதல் பாகத்தில் நடித்தவர்களே நடிப்பார்கள். அதில் எந்த மாற்றமும் இல்லை என்கிறார்கள்.