பிளாஷ்பேக்: படிக்க வந்த இடத்தில் நடிக்க வாய்ப்பு; “காதலிக்க நேரமில்லை” நாயகன் ஆனார் ரவிச்சந்திரன் | கதையின் நாயகன் ஆன சூரி பட இயக்குனர் | கார்த்திக்கு கதை சொன்ன நானி பட இயக்குனர் | வி சாந்தாராம் பயோபிக்கில் ஜெயஸ்ரீ கதாபாத்திரத்தில் தமன்னா | ஆதித்யா பாஸ்கர், கவுரி கிஷன் மீண்டும் இணைந்தனர் | மீண்டும் தமிழில் நடிக்கும் அன்னாபென் | அரசன் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது | சிவாஜி குடும்பத்தை கவுரவிக்கும் பராசக்தி படக்குழு | விஜய் தேவரகொண்டாவிற்கு வில்லன் விஜய் சேதுபதி...? | சூர்யா 47 : நெட்பிளிக்ஸ் முதலீட்டில் அமோக ஆரம்பம் ? |

கலைத்துறையில் இருந்து இப்போது ராஜ்யசபாவுக்கு 2 எம்பிகள் வந்துவிட்டார்கள். பாஜ அரசு சார்பில் ராஜ்யசபா எம்பி ஆகப்பட்டு இருக்கிறார் இளையராஜா. இப்போது திமுக தயவில் கமல்ஹாசனும் எம்பி ஆகி இருக்கிறார். இருவரின் தேர்ந்தெடுப்பு முறை வெவ்வேறு என்றாலும் இரண்டு பேருமே தமிழக ராஜ்யசபா எம்பி என்ற கணக்கில் வருகிறார்கள். ராமராஜன், நெப்போலியன், சரத்குமார், மறைந்த ஜே.கே. ரித்திஷ், எஸ்.எஸ்.சந்திரன் வரிசையில் இப்போது இளையராஜா, கமல்ஹாசனும் பார்லிமென்ட் சென்று இருக்கிறார்கள்.
இதுவரை சினிமாவுக்காக, தனது கலைக்காக பார்லிமென்டில் பெரிதாக பேசவில்லை இளையராஜா. கமல்ஹாசனாவது பேச வேண்டும். தான் சார்ந்த சினிமா வளர்ச்சிக்காக டில்லியில் குரல் கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள் கோலிவுட்டில். இவர்களை தவிர, குஷ்பு, விந்தியா, ராதிகா போன்றவர்களும் எப்படியாவது எம்பி ஆகி, டில்லிக்கு செல்ல வேண்டும் என்று நினைக்கிறார்கள்.