'நந்தி விருதுகள்' பெருமையை மீட்க விரும்பும் ஆந்திரா | சத்தங்களுக்கு மத்தியில் புதிய விடியலை நோக்கி பயணம் : கெனிஷாவின் பதிவு வைரல் | நடிகர் ஹம்சவர்தன் 2வது திருமணம் | ஒரு காட்சிக்காக படத்தின் மொத்த உரிமத்தையும் வாங்கிய 'ஜனநாயகன்' படக்குழு | கூகுள் மூலம் தமிழ் கற்று கொண்ட ருக்மணி வசந்த் | கதாநாயகனாக அறிமுகமாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர் | மலையாள ரீமேக் படத்தில் நடிக்கும் விமல் | மீண்டும் இணையும் எழில், விஷ்ணு விஷால் கூட்டணி | பால்டப்பாவை இயக்கும் விஜய் மில்டன் | சாய் தன்ஷிகாவை திருமணம் செய்கிறார் நடிகர் விஷால் |
கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் கமல்ஹாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: நான் உண்டு, என் வேலை உண்டு என்று இருந்தவன். அரசியல் வேண்டாம் என்று சொல்லிக் கொண்டிருந்தவன். அப்படிப்பட்ட நான் எந்த சூழ்நிலையில் அரசியலுக்கு வந்தேன் என்று எல்லோருக்கும் தெரியும். நான் மறுபடியும் நடிக்க சென்று விடுவேன் என்று பிரச்சாரம் செய்கிறார்கள்.
எம்.ஜி.ஆர் சட்டசபை உறுப்பினராக இருந்து கொண்டு நடித்தார். அது அவருக்கான அரசியல் போராக இருந்தது. இனி நான் நடிக்கும் படங்களுக்கு அதிக சம்பளம் வாங்கி அதனை மக்களுக்காக செலவு செய்வேன். சினிமா எனக்கு தொழில், அது அரசியலுக்கு இடையூறாக இருந்தால் சினிமாவை விட்டு விலகி விடுவேன். தற்போது ஒத்துக் கொண்டிருக்கிற படங்களில் மட்டும் நடித்து கொடுப்பேன் என்றார்.