ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் | நிவேதா பெத்துராஜுக்கு திருமணம் | 'திரெளபதி' இரண்டாம் பாகத்தில் சரித்திர கதை | பிளாஷ்பேக் : காமெடி நாயகனாக விஜயகாந்த் நடித்த படம் | சிரிப்பு சத்தம், காமெடி பஞ்சத்தில் தவிக்கும் தமிழ் சினிமா | பிளாஷ்பேக் : உலகம் முழுக்க வெற்றி பெற்று தமிழில் தோற்ற கதை | ‛பெத்தி' பட பாடலுக்கு ஆயிரம் பேருடன் நடனமாடிய ராம்சரண் | தீபாவளி போட்டியில் டீசல் : ஆக்ஷன் ஹீரோவாக ஹரிஷ் கல்யாண் | அங்கிளான என்னை அண்ணனாக மாற்றிவிட்டார் பஹத் பாசில் ; இயக்குனர் சத்யன் அந்திக்காடு பெருமிதம் |
கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் கமல்ஹாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: நான் உண்டு, என் வேலை உண்டு என்று இருந்தவன். அரசியல் வேண்டாம் என்று சொல்லிக் கொண்டிருந்தவன். அப்படிப்பட்ட நான் எந்த சூழ்நிலையில் அரசியலுக்கு வந்தேன் என்று எல்லோருக்கும் தெரியும். நான் மறுபடியும் நடிக்க சென்று விடுவேன் என்று பிரச்சாரம் செய்கிறார்கள்.
எம்.ஜி.ஆர் சட்டசபை உறுப்பினராக இருந்து கொண்டு நடித்தார். அது அவருக்கான அரசியல் போராக இருந்தது. இனி நான் நடிக்கும் படங்களுக்கு அதிக சம்பளம் வாங்கி அதனை மக்களுக்காக செலவு செய்வேன். சினிமா எனக்கு தொழில், அது அரசியலுக்கு இடையூறாக இருந்தால் சினிமாவை விட்டு விலகி விடுவேன். தற்போது ஒத்துக் கொண்டிருக்கிற படங்களில் மட்டும் நடித்து கொடுப்பேன் என்றார்.