Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரசிகர்களை மீட்டு வருவாரா 'சுல்தான்' ?

31 மார், 2021 - 16:28 IST
எழுத்தின் அளவு:
Will-Sulthan-give-crowd-to-theatres

கொரோனா வந்தாலும் வந்தது திரையுலகம் ஏறக்குறைய விழுந்தே கிடக்கிறது. கொரோனா தளர்வுகளின் காரணமாக கடந்த வருடம் நவம்பர் மாதம் 10ம் தேதி தியேட்டர்கள் திறக்கப்பட்டன. ஆனால், ரசிகர்கள் படம் பார்க்க ஆர்வம் காட்டவில்லை.

பொங்கலை முன்னிட்டு வெளிவந்த 'மாஸ்டர்' படத்திற்கு மட்டுமே ரசிகர்கள் வந்தார்கள். அந்தப் படத்தை ஓடிடியில் வெளியிட்ட பிறகும் கூட தியேட்டர்களுக்கு வந்து ரசிகர்கள் படம் பார்த்து ரசித்தார்கள்.

அதற்கு முன்பும், பின்பும் வெளிவந்த படங்கள் வியாபார ரீதியில் லாபத்தைக் கொடுக்கும் அளவிற்கு வசூலிக்கவில்லை என்பதுதான் உண்மை. இதனிடையே, அடுத்த பெரிய நடிகரின் படமாக கார்த்தி நடித்துள்ள 'சுல்தான்' படம் நாளை மறுநாள் ஏப்ரல் 2ம் தேதி வெளியாகிறது.

தமிழ்நாட்டில் சுமார் 450 தியேட்டர்கள் வரை இப்படம் வெளியாகிறது. 'மாஸ்டர்' படத்திற்கு வந்ததைப் போலவே இந்தப் படத்திற்கும் ரசிகர்கள் வருவார்கள் என தியேட்டர்காரர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இத்தனை தேர்தல் பரபரப்பிலும் ரசிகர்கள் 'சுல்தான்' படம் பார்க்க தியேட்டர்கள் பக்கம் வந்துவிட்டால் அடுத்த வாரம் வெளியாக உள்ள 'கர்ணன்' படத்தையும் பார்க்க வந்துவிடுவார்கள் என எதிர்பார்க்கிறார்கள்.

அது திரையுலகம் மீண்டும் உயிர்த்தெழ காரணமாக இருக்கும். இரண்டு படங்களுமே ரசிகர்கள எதிர்பார்க்கும் படங்களாக அமைந்துவிட்டால் ஏப்ரல், மே மாதங்களில் வெளியாக உள்ள படங்களுக்கும் புத்துணர்வைத் தரும்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
நவரசா படப்பிடிப்பை முடித்த சித்தார்த் - பார்வதிநவரசா படப்பிடிப்பை முடித்த ... விஜய் 65 : பூஜா ஹெக்டே வருத்தம் விஜய் 65 : பூஜா ஹெக்டே வருத்தம்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

தமிழன் - கோவை,இந்தியா
31 மார், 2021 - 17:00 Report Abuse
தமிழன் எல்லாம் பாவப்பட்ட பத்து ரூபா பாப்கார்ன், பகல் கொள்ளையான டிக்கெட் விலை மற்றும் பார்க்கிங் காசு கொள்ளை அடித்ததால் வந்த வினை. இன்னும் 100 வருசம் தியேட்டர் எல்லாம் மூடியே இருக்கட்டும். தமிழ்நாடு உருப்பட தொடங்கும்...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in