‛அரசன்' புரொமோ பயராக உள்ளது : அனிருத்திற்கு சிம்பு பாராட்டு | ‛ரெட்ட தல' படத்தின் கதைக்கரு இதுதான் : இயக்குனர் தகவல் | ஹீரோ அவதாரம் எடுக்கும் தேவி ஸ்ரீ பிரசாந்த் | கேரளா திரைப்பட விநியோகஸ்தர் சங்கத்திற்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் | ஒரு டஜன் வாழைப்பழம் மட்டும் சம்பளமாக பெற்றுக்கொண்டு நடித்த கோவிந்தா | பெண் குற்றச்சாட்டை தொடர்ந்து உதவி இயக்குனர் மீது காவல்துறையில் புகார் அளித்த துல்கர் சல்மான் நிறுவனம் | பாகுபலி : தி எபிக் ரன்னிங் டைம் சென்சார் சான்றிதழ் வெளியானது | எனக்கு தடை விதிப்பவர்களிடம் ஏன் என்று கேளுங்கள்: ராஷ்மிகா | அரிய நோயால் பாதிக்கப்பட்டுள்ள பூமி பட்னேகர் | பிளாஷ்பேக் : அமிதாப்பச்சன் பட ரீமேக்கில் ஆர்வம் காட்டிய ரஜினி |
தமிழ் திரைப்பட தொழிலாளர்களின் நலனுக்காக நிதி திரட்டும் விதமாக 'நவரசா' என்கிற ஆந்தாலாஜி படம் உருவாகி வருகிறது. கவுதம் மேனன், கார்த்திக் சுப்பராஜ் உள்ளிட்ட ஒன்பது பிரபல இயக்குனர்கள் இயக்கும் ஒன்பது குறும்படங்கள் இதில் இடம் பெறுகின்றன. இதில் ரதீந்திரன் பிரசாத் என்பவர் இயக்கியுள்ள 'இன்மை' என்கிற குறும்படத்தில் நடித்துள்ளார் நடிகை பார்வதி. நாயகனாக சித்தார்த் நடித்துள்ளார். இதை மரியான் பட இயக்குனர் பரத் பாலா தயாரித்துள்ளார்.
இதன் படப்பிடிபை முடித்துள்ள பார்வதி, இந்தப்படத்தில் சித்தார்த்துடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை தனது சோஷியல் மீடியாவில் வெளியிட்டள்ளார். மேலும் இப்படத்தில் நடித்தது குறித்து அவர் குறிப்பிடுகையில், “என்ன ஒரு நாளாக அது இருந்தது..!! நவரசாவில் நானும் ஒரு பாகமாக 'இன்மை' என்கிற ரொம்பவே புத்திசாலித்தனமான குறும்படத்தில் சித்தார்த்துடன் இணைந்து நானும் ஒரு பாகமாக இருக்கும் வாய்பை பெற்றேன்.. அதுமட்டுமல்ல, மரியான் படத்தை அடுத்து எட்டு வருடங்களுக்கு பிறகு பரத்பாலாவுடன் மீண்டும் இணைந்து பணியாற்றியுள்ளேன்” என குறிப்பிட்டுள்ளார் பார்வதி.