அஸ்வத் மாரிமுத்துவிற்கு விண்ணப்பித்த 15 ஆயிரம் உதவி இயக்குனர்கள்! | கவுதம் ராம் கார்த்திக் 19வது படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | ''இப்போ ரிஸ்க் எடுக்கலைனா.. எப்பவும் இல்ல'': சினிமா என்ட்ரி குறித்து மனம்திறந்த காவ்யா அறிவுமணி | த்ரிவிக்ரம் இயக்கத்தில் தனுஷ்? | குட் பேட் அக்லி - முன்பதிவு நிலவரம் என்ன? | அஜித், தனுஷ் கூட்டணி அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது! | 'ரெட்ட தல' படத்தின் புதிய அப்டேட்! | ராஜமவுலியுடன் இணையாதது ஏன்? சிரஞ்சீவி விளக்கம் | சென்னையை விட்டு சென்றது ஏன்? சசிகுமார் விளக்கம் | தமிழிலும் வெளியாகும் 'இத்திக்கர கொம்பன்' |
தமிழ் திரைப்பட தொழிலாளர்களின் நலனுக்காக நிதி திரட்டும் விதமாக 'நவரசா' என்கிற ஆந்தாலாஜி படம் உருவாகி வருகிறது. கவுதம் மேனன், கார்த்திக் சுப்பராஜ் உள்ளிட்ட ஒன்பது பிரபல இயக்குனர்கள் இயக்கும் ஒன்பது குறும்படங்கள் இதில் இடம் பெறுகின்றன. இதில் ரதீந்திரன் பிரசாத் என்பவர் இயக்கியுள்ள 'இன்மை' என்கிற குறும்படத்தில் நடித்துள்ளார் நடிகை பார்வதி. நாயகனாக சித்தார்த் நடித்துள்ளார். இதை மரியான் பட இயக்குனர் பரத் பாலா தயாரித்துள்ளார்.
இதன் படப்பிடிபை முடித்துள்ள பார்வதி, இந்தப்படத்தில் சித்தார்த்துடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை தனது சோஷியல் மீடியாவில் வெளியிட்டள்ளார். மேலும் இப்படத்தில் நடித்தது குறித்து அவர் குறிப்பிடுகையில், “என்ன ஒரு நாளாக அது இருந்தது..!! நவரசாவில் நானும் ஒரு பாகமாக 'இன்மை' என்கிற ரொம்பவே புத்திசாலித்தனமான குறும்படத்தில் சித்தார்த்துடன் இணைந்து நானும் ஒரு பாகமாக இருக்கும் வாய்பை பெற்றேன்.. அதுமட்டுமல்ல, மரியான் படத்தை அடுத்து எட்டு வருடங்களுக்கு பிறகு பரத்பாலாவுடன் மீண்டும் இணைந்து பணியாற்றியுள்ளேன்” என குறிப்பிட்டுள்ளார் பார்வதி.