திருமணமா...? வதந்திகளை பரப்பாதீர்கள் : அனிருத் | சூர்யாவின் 'டிராப் இயக்குனர்கள்' பட்டியலில் இணைகிறாரா வெற்றிமாறன்? | ஓடிடியில் அதிக தொகைக்கு விற்பனையான அனுஷ்காவின் காட்டி | இயக்குனர் அட்லிக்கு கவுரவ டாக்டர் பட்டம் | பறந்து போ படத்தில் யுவன் இல்லாதது ஏன்? ராம் விளக்கம் | கிங்டம் படத்தின் ரிலீஸ் தேதியில் மீண்டும் மாற்றமா? | பிளாஷ்பேக்: பாரதிராஜா கைவிட்ட 'பச்சைக்கொடி' | நடிகர் சங்கத்தின் பெயரில் 40 லட்சம் மோசடி: முன்னாள் மேலாளர் மீது புகார் | பிளாஷ்பேக் : அழகும், குரலும் சரியில்லாததால் மனைவியை நீக்கிய தயாரிப்பாளர் | மன்னிப்பு கேட்காத கமல்: நீதிபதி அதிருப்தி |
வெங்கட் பிரபு இயக்கத்தில் யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில் சிலம்பரசன், கல்யாணி பிரியதர்ஷன், எஸ்ஜே சூர்யா மற்றும் பலர் நடிக்கும் படம் 'மாநாடு'. கொரோனா தளர்வுகளுக்குப் பிறகு இப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் ஆரம்பமாகி தொடர்ந்து நடைபெற்றது. ஒரு சிறு இடைவெளிக்குப் பிறகு தற்போது இறுதிக்கட்டப் படப்பிடிப்புக்கு ஆயத்தமாகி வருகிறார்கள்.
இதற்காக சென்னையை அடுத்த பூந்தமல்லியில் உள்ள ஸ்டுடியோவில் பிரம்மாண்டமான மாநாடு அரங்கம் ஒன்று கடந்த ஒரு வார காலமாக அமைக்கப்பட்டு வந்தது. அந்த வேலைகள் முடிவடைந்து இன்று அல்லது நாளை அங்கு கிளைமாக்ஸ் காட்சி படமாக்கப்பட உள்ளதாம். இதில் படத்தில் உள்ள முக்கிய நடிகர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.
இப்படத்திற்காக முழு ஒத்துழைப்பு கொடுத்து சிம்பு நடித்து வருவதாகச் சொல்கிறார்கள். கொரோனா காலத்திலும் படப்பிடிப்புக்குத் தவறாமல் வருகை தந்து படக்குழுவினரை ஆச்சரியப்படுத்தினார் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அரசியல் கலந்த ஆக்ஷன் படமாக உருவாகி வருகிறது 'மாநாடு'.