திருமணமா...? வதந்திகளை பரப்பாதீர்கள் : அனிருத் | சூர்யாவின் 'டிராப் இயக்குனர்கள்' பட்டியலில் இணைகிறாரா வெற்றிமாறன்? | ஓடிடியில் அதிக தொகைக்கு விற்பனையான அனுஷ்காவின் காட்டி | இயக்குனர் அட்லிக்கு கவுரவ டாக்டர் பட்டம் | பறந்து போ படத்தில் யுவன் இல்லாதது ஏன்? ராம் விளக்கம் | கிங்டம் படத்தின் ரிலீஸ் தேதியில் மீண்டும் மாற்றமா? | பிளாஷ்பேக்: பாரதிராஜா கைவிட்ட 'பச்சைக்கொடி' | நடிகர் சங்கத்தின் பெயரில் 40 லட்சம் மோசடி: முன்னாள் மேலாளர் மீது புகார் | பிளாஷ்பேக் : அழகும், குரலும் சரியில்லாததால் மனைவியை நீக்கிய தயாரிப்பாளர் | மன்னிப்பு கேட்காத கமல்: நீதிபதி அதிருப்தி |
இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் - சூர்யா கூட்டணியில் வெளிவந்த 'கஜினி, ஏழாம் அறிவு' ஆகிய இரண்டு படங்களும் தமிழ் சினிமாவில் குறிப்பிடும்படியான படங்களாக அமைந்தன. அந்தக் கூட்டணி கடந்த 10 வருடங்களாக மீண்டும் இணையாமல் உள்ளது. விஜய்யின் 65வது படத்தை முருகதாஸ் தான் முதலில் இயக்கப் போவதாக செய்திகள் வெளிவந்தன. ஆனால், சில காரணங்களால் அவர் அந்தப் படத்திலிருந்து விலகிவிட்டார்.
இதனிடையே, தன்னுடைய அடுத்த படத்தை மிகவும் பிரம்மாண்டமாக உருவாக்க வேண்டும் என முருகதாஸ் முடிவெடுத்துள்ளதாகச் சொல்கிறார்கள். மீண்டும் அவரும் சூர்யாவும் இணையும் படமாகவும் அது இருக்கலாம் என்கிறார்கள். அந்தப் படத்தை உலக அளவில் கொண்டு சேர்க்கக் கூடிய படமாக உருவாக்க முருகதாஸ் திட்டமிட்டுள்ளார் என்ற தகவல் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
சூர்யா தற்போது பாண்டிராஜ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். அடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் 'வாடிவாசல்' படத்தில் நடிக்கப் போகிறார். அவற்றை முடித்துவிட்டு முருகதாஸ் இயக்கும் படத்தில் நடிப்பார் என்றும் சொல்கிறார்கள்.