பாடல்கள் ஹிட்டாவதற்கு 'ரீல்ஸ்' வீடியோக்கள்தான் முக்கியமா? | ரஷ்மி முரளி: தோழி நடிகையைத் தேடிய ரசிகர்கள் | விஜய் படம் ரீ-ரிலீசா… அப்போது அஜித் படமும் ரீ-ரிலீஸ்… | விஷ்ணு விஷால் - ஜுவாலா கட்டா தம்பதிக்கு பெண் குழந்தை | WWE-ல் ராணா டகுபட்டிக்குக் கிடைத்த பெருமை | வீர தீர சூரன் ஓடிடி வாங்கிய விலை இவ்ளோதானா? | ஓடிடி-யில் பெரும் விலைக்கு மோகன்லாலின் எல் 2 :எம்புரான் | புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே |
தமிழ்த் திரையுலகின் நம்பர் 1 நடிகையான நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் காதலர்கள் என்பது ஊரறறிந்த செய்தி. ஆனால், அவர்கள இருவரும் கடந்த சில வருடங்களாக லிவிங் டு கெதர் ஆக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பது பலர் அறியாத செய்தி.
இருவரும் அடிக்கடி ஜோடியாக புகைப்படங்களைப் பதிவிட்டு ரசிகர்களை அடிக்கடி பொறாமைப்பட வைத்து வந்தார்கள். அப்போதும் அவர்கள் இருவரும் எப்போது திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள் எனப் பலர் கேட்பது வழக்கம்.
இன்று விக்னேஷ் சிவன் பதிவிட்டுள்ள ஒரு புகைப்படம் மூலம் அவர்கள் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்துவிட்டதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இன்ஸ்டாகிராமில், “விரலோடு உயிர் கூட கோர்த்து” என ஒரு வரியைப் பதிவிட்டு ஹாட்டின் ஸ்மைலிகளையும் சேர்த்துள்ளார் விக்னேஷ் சிவன் அதற்கான புகைப்படத்தில் நயன்தாராவின் கைவிரல்களில் மோதிரத்துடன் இருக்கும் படத்தைத்தான் பதிவிட்டுள்ளார்.
ஒன்று இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்திருக்கலாம், அல்லது விரைவில் நடக்கலாம். எப்படியோ விரைவில் திருமண அறிவிப்பு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.