ஆர்யாவின் ‛அனந்தன் காடு' | விஜய்யை தொடர்ந்து தனுஷை இயக்கும் வினோத் | ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை காண முடியாமல் போனவருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு | துருவ நட்சத்திரம் : சிம்ரன் அளித்த உறுதி | குபேரா படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு | பிளாஷ்பேக்: விஜயகாந்த் நடிக்க மறுத்து, மம்மூட்டி நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் | தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான் | வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் |
தமிழ்த் திரையுலகின் நம்பர் 1 நடிகையான நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் காதலர்கள் என்பது ஊரறறிந்த செய்தி. ஆனால், அவர்கள இருவரும் கடந்த சில வருடங்களாக லிவிங் டு கெதர் ஆக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பது பலர் அறியாத செய்தி.
இருவரும் அடிக்கடி ஜோடியாக புகைப்படங்களைப் பதிவிட்டு ரசிகர்களை அடிக்கடி பொறாமைப்பட வைத்து வந்தார்கள். அப்போதும் அவர்கள் இருவரும் எப்போது திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள் எனப் பலர் கேட்பது வழக்கம்.
இன்று விக்னேஷ் சிவன் பதிவிட்டுள்ள ஒரு புகைப்படம் மூலம் அவர்கள் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்துவிட்டதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இன்ஸ்டாகிராமில், “விரலோடு உயிர் கூட கோர்த்து” என ஒரு வரியைப் பதிவிட்டு ஹாட்டின் ஸ்மைலிகளையும் சேர்த்துள்ளார் விக்னேஷ் சிவன் அதற்கான புகைப்படத்தில் நயன்தாராவின் கைவிரல்களில் மோதிரத்துடன் இருக்கும் படத்தைத்தான் பதிவிட்டுள்ளார்.
ஒன்று இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்திருக்கலாம், அல்லது விரைவில் நடக்கலாம். எப்படியோ விரைவில் திருமண அறிவிப்பு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.