தனுஷ் 55, தயாரிப்பாளர் மாறுகிறாரா ? | ஓமர் ஷெரீப்பை மம்முட்டியாக மாற்றிய நண்பனை முதன் முறையாக மேடையேற்றிய மம்முட்டி | மீண்டும் ஒரே நாளில் வெளியாகும் அனுபமா, ரஜிஷா படங்கள் | மகேஷ்பாபு, ரவீனா டான்டன் குடும்ப வாரிசுகள் இணையும் படத்திற்கு டைட்டில் அறிவிப்பு | இப்போதைக்கு லோகா.. அடுத்து இன்னொரு படம் வரும் : பிரித்விராஜ் ஆருடம் | திரிஷ்யம் 3 மலையாளத்தில் தான் முதலில் வெளியாகும் : ஜீத்து ஜோசப் திட்டவட்டம் | பாலிவுட் நடிகருக்கு ஜோடியாகும் மீனாட்சி சவுத்ரி | நடிகர் சிவகுமாருக்கு கவுரவ டாக்டர் பட்டம் | 'அவதார் ' பார்க்க 10 லட்சம் இந்தியர்கள் ஆர்வம் | பிளாஷ்பேக் : ரீமேக்கில் வெள்ளி விழா கொண்டாடிய படம் |

சில தினங்களுக்கு முன்பு நயன்தாராவின் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிடப்பட்டு பின்னர் நீக்கப்பட்டதாக கூறப்பட்ட ஸ்க்ரீன்ஷாட் ஒன்று வைரலாக பரவியது. அதில் “ஒரு முட்டாளை திருமணம் செய்யும்போது திருமணம் என்பது ஒரு தவறு என்று ஆகிறது. உங்கள் கணவரின் நடவடிக்கைகளுக்கு நீங்கள் தான் பொறுப்பேற்க வேண்டும். காரணம் ஆண்கள் உண்மையில் வளர்வதே இல்லை” என்ற வாசகங்கள் அதில் இடம் பெற்றிருந்தன. இதை வைத்து நடிகை நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் பிரிய போவதாக செய்திகள் பரவின. ஆனால் இது போலியான நபர்களால் உருவாக்கப்பட்ட பதிவு. இதுபற்றி கூட நாம் விசாரித்து ஒரு செய்தி வெளியிட்டு இருந்தோம். அவர்கள் மகிழ்ச்சியாக வாழ்கின்றனர் என அவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் நடிகை நயன்தாரா தனது இன்ஸ்ட்ராகிராமில் ஒரு போட்டோவை வெளியிட்டுள்ளார். அதில் விக்னேஷ் சிவன் முதுகில் அவர் படுத்திருப்பது போன்ற படம் ஒன்றை வெளியிட்டு “எங்களை பற்றி வரும் கிறுக்குத்தனமான செய்திகளுக்கு எங்களுடைய ரியாக்ஷன்” என்று குறிப்பிட்டுள்ளார்.