கதை நாயகியாக "யாஷிகா ஆனந்த்" நடிக்கும் “டாஸ்” | குஷி குழுவை சந்திப்பாரா விஜய் | பைரசியை விட இவர்களை பார்த்தால் பயமாக உள்ளது : பிரேம் குமார் | செப்டம்பர் இறுதி வார ஓடிடி ரிலீஸ்..... பெரிய லிஸ்ட் இருக்கு....! | நான் அப்படி சொல்லவில்லை : கல்யாணி பிரியதர்ஷன் | ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கு : அக்., 30ல் தீர்ப்பு | பிளாஷ்பேக் : தாணுவுக்காக கவுரவ தோற்றத்தில் தோன்றிய ரஜினி | ரஜினி, கமல் மாதிரி தனுஷ், சிம்பு இணைகிறார்களா? | தமிழ் படங்களை புறக்கணிக்கிறாரா? சாய்பல்லவிக்கு என்னாச்சு? | யுவன் சங்கர் ராஜா இசை சுற்றுப்பயணம் |
சென்னை : பிரபல பின்னணி பாடகி பி.சுசீலாவுக்கு தமிழக அரசின் சிறப்பு கலைமாமணி விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளார்.
வட இந்தியாவில் லதா மங்கேஷ்கர் போன்று தென்னிந்தியாவின் பாடும் வானம்பாடி பி.சுசீலா(85). 60 ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவில் பாடி வரும் இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் 50 ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்கள் பாடி கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார். இவரின் சாதனை எண்ணிலடங்காதது. பத்மபூஷண், பத்மஸ்ரீ போன்ற விருதுகளை வென்றிருப்பவர் 5 முறை தேசிய விருது, தமிழக அரசின் கலைமாமணி உள்ளிட்ட பல மாநில அரசுகளின் விருதுகளையும் வென்றுள்ளார்.
இந்நிலையில் இவருக்கு மற்றொரு மகுடமாய் தமிழக அரசின் சிறப்பு கலைமாமணி விருது வழங்கப்பட்டுள்ளது. இயல், இசை, நாடக துறையில் சாதனை புரிந்த கலைஞர்களுக்கு தமிழக அரசு கலைமாமணி விருது வழங்கி கவுரவித்து வருகிறது. சமீபத்தில் சிவகார்த்திகேயன், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பல கலைஞர்களுக்கு கலைமாமணி விருதுகள் வழங்கப்பட்டன.
![]() |