ரஜினி படத்தை இயக்குகிறாரா வினோத் | ரகசியத்தை சொன்ன சார்லி : மிரண்டு போன பன் பட்டர் ஜாம் படக்குழு | விஷ்ணு விஷால் மகளுக்கு அமீர்கான் பெயர் வைத்தது ஏன்? | சாய்பல்லவி, ஐஸ்வர்ய லட்சுமி, அதிதி வரிசையில் ஹீரோயின் ஆன டாக்டர் | மரபணு மாற்றப்பட்ட மனிதனின் கதை : ‛கைமேரா' அர்த்தம் இதுதான் | சூர்யாவுடன் நடிப்பது வாழ்நாள் கனவு: மீனாட்சி தினேஷ் | 'இந்தியன் 2, தக் லைப்' தோல்விகள் : 'இந்தியன் 3' எதிர்காலம் என்ன ? | பிளாஷ்பேக்: ஆக்ஷன் ஹீரோவாக நடித்த ராஜேஷ் | பிளாஷ்பேக்: 40 வயது மூத்தவருக்கு ஜோடி: இதிலும் சாதனை படைத்த ஸ்ரீதேவி | 25 ஆண்டுகளுக்கு பிறகு மகனுடன் இணைந்து நடிக்கும் ஜெயராம் |
தெலுங்குத் திரையுலகில் குறுகிய காலத்தில் முன்னணி நடிகராகவும், பிரபலமானவராகவும் வளர்ந்தவர் விஜய் தேவரகொண்டா. 'அர்ஜுன் ரெட்டி' என்ற ஒரே ஒரு படம் அவரை உச்சத்துக் கொண்டு சென்றது.
தெலங்கானா மாநிலத்தில் தனது சொந்த ஊரான மெகபூப் நகரில் புதிதாக மல்டிபிளக்ஸ் தியேட்டர் ஒன்றைத் திறக்க உள்ளார் விஜய். ஏற்கெனவே சொந்தமாக 'ரவுடி வேர்' என்ற ஆடை கம்பெனியையும், கிங் ஆப் த ஹில் என்ற சினிமா தயாரிப்பு நிறுவனத்தையும் வைத்துள்ள விஜய், அடுத்த பிஸினஸ் ஆக இந்த தியேட்டர் பிஸினஸ் இடம் பெறுகிறது.
பிரபல ஏசியன் சினிமாஸ் நிறுவனத்துடன் இணைந்து எவிடி, அதாவது ஏசியன் விஜய் தேவரகொண்டா சினிமாஸ் என்ற பெயரில் முதல் மல்டிபிளக்ஸ வளாகம் மெகபூப் நகரில் அடுத்த மாதம் திறக்கப்பட உள்ளது. பவன் கல்யாண் நடித்து வெளிவர உள்ள 'வக்கீல் சாப்' படம் தான் முதன் முதலாகத் திரையிடப்பட உள்ளது.
ஏற்கெனவே ஏசியன் சினிமாஸ் நிறுவனம், ஐதராபாத்தில் எஎம்பி சினிமாஸ் என்ற பெயரில் நடிகர் மகேஷ் பாபுவுடன் இணைந்து பெரிய மல்டிபிளக்ஸ தியேட்டரைத் திறந்து நடத்தி வருகிறது.
தமிழ்நாட்டில் எந்த ஒரு நடிகரும் சொந்தமாக இன்னும் தியேட்டர்களை ஆரம்பிக்கவில்லை. ஆனால், சொந்தப் பட நிறுவனங்களை வைத்திருக்கிறார்கள்.