ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' |
தெலுங்குத் திரையுலகில் குறுகிய காலத்தில் முன்னணி நடிகராகவும், பிரபலமானவராகவும் வளர்ந்தவர் விஜய் தேவரகொண்டா. 'அர்ஜுன் ரெட்டி' என்ற ஒரே ஒரு படம் அவரை உச்சத்துக் கொண்டு சென்றது.
தெலங்கானா மாநிலத்தில் தனது சொந்த ஊரான மெகபூப் நகரில் புதிதாக மல்டிபிளக்ஸ் தியேட்டர் ஒன்றைத் திறக்க உள்ளார் விஜய். ஏற்கெனவே சொந்தமாக 'ரவுடி வேர்' என்ற ஆடை கம்பெனியையும், கிங் ஆப் த ஹில் என்ற சினிமா தயாரிப்பு நிறுவனத்தையும் வைத்துள்ள விஜய், அடுத்த பிஸினஸ் ஆக இந்த தியேட்டர் பிஸினஸ் இடம் பெறுகிறது.
பிரபல ஏசியன் சினிமாஸ் நிறுவனத்துடன் இணைந்து எவிடி, அதாவது ஏசியன் விஜய் தேவரகொண்டா சினிமாஸ் என்ற பெயரில் முதல் மல்டிபிளக்ஸ வளாகம் மெகபூப் நகரில் அடுத்த மாதம் திறக்கப்பட உள்ளது. பவன் கல்யாண் நடித்து வெளிவர உள்ள 'வக்கீல் சாப்' படம் தான் முதன் முதலாகத் திரையிடப்பட உள்ளது.
ஏற்கெனவே ஏசியன் சினிமாஸ் நிறுவனம், ஐதராபாத்தில் எஎம்பி சினிமாஸ் என்ற பெயரில் நடிகர் மகேஷ் பாபுவுடன் இணைந்து பெரிய மல்டிபிளக்ஸ தியேட்டரைத் திறந்து நடத்தி வருகிறது.
தமிழ்நாட்டில் எந்த ஒரு நடிகரும் சொந்தமாக இன்னும் தியேட்டர்களை ஆரம்பிக்கவில்லை. ஆனால், சொந்தப் பட நிறுவனங்களை வைத்திருக்கிறார்கள்.