ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யாவின் 40வது படம் உருவாகி வருகிறது. கதாநாயகியாக பிரியங்கா அருள் மோகன் நடிக்கிறார். தவிர சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், ஜெயபிரகாஷ், இளவரசு என பல குணச்சித்திர நடிகர்களும் இதில் இடம்பெற்றுள்ளனர். கடந்த மாதம் சூர்யா, கொரோனா தொற்றுக்கு ஆளானதால் இதன் படப்பிடிப்பு தள்ளிவைக்கப்பட்டது.
இந்தநிலையில் இந்தப்படத்தின் படப்பிடிப்பு தற்போது துவங்கியுள்ளது. படப்பிடிப்பில் கலந்து கொண்ட சூர்யா, துப்பாக்கியை நீட்டியபடி நிழல் மறைவாக தான் நிற்பது போன்ற ஒரு அதிரடியான புகைப்படம் ஒன்றை பகிர்ந்து கொண்டுள்ளார். மேலும் படப்பிடிப்பு தளத்திற்கு திரும்பியதும் நலமாக உணர்கிறேன்' என்றும் குறிப்பிட்டுள்ளார். சூர்யா வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்க்கும்போது பாண்டிராஜின் வழக்கமான பாணியிலிருந்து இந்தப்படம் முற்றிலும் மாறுபட்டிருக்கும் என்பது நன்றாக தெரிகிறது. .