'காந்தி டாக்ஸ்' முதல் 'வித் லவ்' வரை... இந்த வார ஓடிடி வெளியீடுகள்.. | வருங்கால கணவருக்கு என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டும்! மீனாட்சி சவுத்ரி வெளியிட்ட தகவல் | வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி: 'துரந்தர்- 2' படத்தின் டிரைலர் நாளை வெளியாகிறது | ஜான்வி கபூரின் பிறந்தநாளில் வெளியிடப்பட்ட பெத்தி பட போஸ்டர்! | யோகி பாபுவின் 'கெணத்த காணோம்' படத்தின் டிரைலர் வெளியானது! | ரஜினி, கமல் இணையும் படம்: லதா ரஜினிகாந்த் சொன்ன தகவல் | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் 'கார்மேனி செல்வம்' புதிய ரிலீஸ் தேதி | மீண்டும் சிரஞ்சீவி படத்திற்கு இசையமைக்கும் தமன்! | என் போட்டோவை மார்பிங் செய்கின்றனர்!: ரச்சிதா ஆதங்கம் | ரொமான்டிக் திரில்லர் கதையில் உருவாகும் 'ஆசை' |

பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யாவின் 40வது படம் உருவாகி வருகிறது. கதாநாயகியாக பிரியங்கா அருள் மோகன் நடிக்கிறார். தவிர சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், ஜெயபிரகாஷ், இளவரசு என பல குணச்சித்திர நடிகர்களும் இதில் இடம்பெற்றுள்ளனர். கடந்த மாதம் சூர்யா, கொரோனா தொற்றுக்கு ஆளானதால் இதன் படப்பிடிப்பு தள்ளிவைக்கப்பட்டது.
இந்தநிலையில் இந்தப்படத்தின் படப்பிடிப்பு தற்போது துவங்கியுள்ளது. படப்பிடிப்பில் கலந்து கொண்ட சூர்யா, துப்பாக்கியை நீட்டியபடி நிழல் மறைவாக தான் நிற்பது போன்ற ஒரு அதிரடியான புகைப்படம் ஒன்றை பகிர்ந்து கொண்டுள்ளார். மேலும் படப்பிடிப்பு தளத்திற்கு திரும்பியதும் நலமாக உணர்கிறேன்' என்றும் குறிப்பிட்டுள்ளார். சூர்யா வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்க்கும்போது பாண்டிராஜின் வழக்கமான பாணியிலிருந்து இந்தப்படம் முற்றிலும் மாறுபட்டிருக்கும் என்பது நன்றாக தெரிகிறது. .




