‛நரிவேட்டை' முதல் ‛8 வசந்தலு' வரை... ஓடிடியில் இந்தவார வரவு என்னென்ன...? | பெரிய பட்ஜெட்டில் 3டி அனிமேஷனில் தயாராகும் பெருமாளின் அவதாரங்கள் | வெப் தொடரில் நாயகன் ஆன சரவணன் | 'ஜென்ம நட்சத்திரம்' படத்தில் அதிர்ச்சி அளிக்கும் கிளைமாக்ஸ் | 3 மொழிகளில் தயாராகும் 'ஏழுமலை' | 'ஜானகி' பெயரை மாற்ற தயாரிப்பாளர் ஒப்புதல் | பிளாஷ்பேக்: பொன்விழா ஆண்டில் மது அம்பாட் | பிளாஷ்பேக்: சினிமாவில் ஹீரோவான பிறகும் நாடகத்தில் நடித்த எம்ஜிஆர் | 'ப்ரீடம்' வெளியீடு தள்ளி வைப்பு : நாளை ரிலீஸ் ? | தனுஷ் 54 படப்பிடிப்பு, பூஜையுடன் ஆரம்பம் |
கொரோனா தாக்கம் கடந்த சில நாட்களாக ஒரு சில மாநிலங்களில் மீண்டும் அதிகரித்துள்ளது. சில மாநிலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சில கட்டுப்பாடுகளை விதித்து வருகிறார்கள். அந்த விதத்தில் மகாராஷ்டிர மாநிலத்தில் தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி என்ற உத்தரவை மீண்டும் பிறப்பித்துள்ளார்கள். மேலும், மாஸ்க் அணிவதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
ஒரு மாநிலத்தில் ஒரு விஷயம் ஆரம்பிக்கப்பட்டால் அதை மற்ற சில மாநிலங்களும் பயன்படுத்த ஆரம்பிக்கும். அந்த விதத்தில் மகாராஷ்டிர மாநில அரசின் உத்தரவை அடுத்து தமிழ்நாட்டிலும் அது போன்ற உத்தரவு வருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழ்நாட்டிலும் கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பள்ளி, கல்லூரிகளை மூட வேண்டும் என சிலர் கோரிக்கை வைத்துள்ளனர். ஏற்கெனவே தமிழ்நாட்டில் தியேட்டர்களுக்கு மக்கள் வருவதேயில்லை. இருந்தாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இங்கும் தியேட்டர்களில் 50 சதவீத இருக்கை அமல்படுத்தபடும் ஒரு சூழல் உருவாகி வருகிறது என்றே சொல்கிறார்கள்.