சினிமா துறை நாறிப் போய் உள்ளது : சனம் ஷெட்டி கோபம் | பேட் மேன் பட நடிகர் வால் கில்மர் காலமானார் | குட் பேட் அக்லி படத்தின் ரன்னிங் டைம் வெளியானது | 29 வயதா.... நம்பமுடியவில்லை என்கிறார் ராஷ்மிகா | ஹிப் ஹாப் ஆதியின் படத்தை இயக்கும் ஜோ இயக்குனர் | காதல் பிரேக்கப்பிற்கு சானியா ஐயப்பன் சொன்ன அதிர்ச்சி காரணம் | முன்கூட்டியே ரிலீசாகும் மோகன்லாலின் தொடரும் படம் | எம்புரான் டைட்டில் : நன்றி கார்டில் சுரேஷ்கோபி பெயர் நீக்கம் | வீர தீர சூரன் வெற்றி : வின்டேஜ் புகைப்படம் பகிர்ந்த துருவ் விக்ரம் | பெண் விரிவுரையாளருக்கு 2.68 லட்சம் நஷ்ட ஈடு வழங்க மோகன்லால் பட தயாரிப்பாளருக்கு நீதிமன்றம் உத்தரவு |
கொரோனா தாக்கம் கடந்த சில நாட்களாக ஒரு சில மாநிலங்களில் மீண்டும் அதிகரித்துள்ளது. சில மாநிலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சில கட்டுப்பாடுகளை விதித்து வருகிறார்கள். அந்த விதத்தில் மகாராஷ்டிர மாநிலத்தில் தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி என்ற உத்தரவை மீண்டும் பிறப்பித்துள்ளார்கள். மேலும், மாஸ்க் அணிவதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
ஒரு மாநிலத்தில் ஒரு விஷயம் ஆரம்பிக்கப்பட்டால் அதை மற்ற சில மாநிலங்களும் பயன்படுத்த ஆரம்பிக்கும். அந்த விதத்தில் மகாராஷ்டிர மாநில அரசின் உத்தரவை அடுத்து தமிழ்நாட்டிலும் அது போன்ற உத்தரவு வருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழ்நாட்டிலும் கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பள்ளி, கல்லூரிகளை மூட வேண்டும் என சிலர் கோரிக்கை வைத்துள்ளனர். ஏற்கெனவே தமிழ்நாட்டில் தியேட்டர்களுக்கு மக்கள் வருவதேயில்லை. இருந்தாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இங்கும் தியேட்டர்களில் 50 சதவீத இருக்கை அமல்படுத்தபடும் ஒரு சூழல் உருவாகி வருகிறது என்றே சொல்கிறார்கள்.