இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
தெலுங்கு சினிமாவின் இளம் நடிகரும், நடிகை சமந்தாவின் கணவருமான நாகசைதன்யாவுக்கும் வெறித்தனமான ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பது சமீபத்தில் சோஷியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வரும் வீடியோ மூலம் உறுதியாகியுள்ளது. தற்போது தெலங்கானா மாநிலத்தில் கிழக்கு கோதாவரி ஆற்றில் நாகசைதன்யா நடிக்கும் 'லவ் ஸ்டோரி' படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதில் நாகசைதன்யா படகு சவாரி செய்வது போன்ற காட்சி படமாக்கப்பட்டு வருகிறது. .
அப்போது ஆற்றின் மேல் உள்ள பாலத்தில் இருந்து படப்பிடிப்பை வேடிக்கை பார்த்த ரசிகர்கள் கோஷமிட்டு நாகசைதன்யாவின் கவனத்தை ஈர்க்க முயற்சி செய்தனர். அதில் தீவிர ரசிகர் ஒருவர், வெகு அருகில் சென்று நாகசைதன்யாவை பார்க்க வேண்டும் என்பதற்காக பாலத்தில் இருந்து ஆற்றில் குதித்து நாகசைதன்யாவின் படகை நோக்கி நீந்தி செல்லும் வீடியோ தான் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
அதன்பின் அந்த ரசிகரை தனது படகில் ஏற்றிய நாகசைதன்யா, அவரை தனது கேரவனுக்கு அழைத்து சென்று அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். மேலும் இதுபோன்ற ஆபத்தான செயல்களில் ஈடுபடக்கூடாது என்றும் அவருக்கு அறிவுரையும் கூறி அனுப்பி வைத்தார் நாகசைதன்யா.