'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
தெலுங்கு சினிமாவின் இளம் நடிகரும், நடிகை சமந்தாவின் கணவருமான நாகசைதன்யாவுக்கும் வெறித்தனமான ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பது சமீபத்தில் சோஷியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வரும் வீடியோ மூலம் உறுதியாகியுள்ளது. தற்போது தெலங்கானா மாநிலத்தில் கிழக்கு கோதாவரி ஆற்றில் நாகசைதன்யா நடிக்கும் 'லவ் ஸ்டோரி' படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதில் நாகசைதன்யா படகு சவாரி செய்வது போன்ற காட்சி படமாக்கப்பட்டு வருகிறது. .
அப்போது ஆற்றின் மேல் உள்ள பாலத்தில் இருந்து படப்பிடிப்பை வேடிக்கை பார்த்த ரசிகர்கள் கோஷமிட்டு நாகசைதன்யாவின் கவனத்தை ஈர்க்க முயற்சி செய்தனர். அதில் தீவிர ரசிகர் ஒருவர், வெகு அருகில் சென்று நாகசைதன்யாவை பார்க்க வேண்டும் என்பதற்காக பாலத்தில் இருந்து ஆற்றில் குதித்து நாகசைதன்யாவின் படகை நோக்கி நீந்தி செல்லும் வீடியோ தான் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
அதன்பின் அந்த ரசிகரை தனது படகில் ஏற்றிய நாகசைதன்யா, அவரை தனது கேரவனுக்கு அழைத்து சென்று அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். மேலும் இதுபோன்ற ஆபத்தான செயல்களில் ஈடுபடக்கூடாது என்றும் அவருக்கு அறிவுரையும் கூறி அனுப்பி வைத்தார் நாகசைதன்யா.