10 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் தெறி | கிராமத்து கெட்டப்பில் வெளியான ஐஸ்வர்யா ராஜேஷின் ‛ஓ சுகுமாரி' முதல் பார்வை | கவர்ச்சி நடனம் ஆடிய ரஜிஷா விஜயன் | ஜனவரி 22ல் மலையாள திரையுலகம் வேலை நிறுத்தம் | அமிதாப் பச்சனை பார்க்க ஷாப்பிங் மாலில் நடந்த தள்ளுமுள்ளுவில் கண்ணாடி உடைப்பு : ரசிகர்கள் காயம் | சஞ்சய் தத்தை உண்மையிலேயே ஏமாற்றியது லியோவா ? ராஜா சாப்பா ? | பொங்கல் வெளியீட்டில் குதித்த ‛வா வாத்தியார்' | பொங்கலுக்கு மேலும் சில படங்கள் ரிலீஸ் | தமிழில் தடுமாற்றத்தில் 'தி ராஜா சாப்' | 'பராசக்தி'யில் இருக்கும் 'புறநானூறு'.... |

மகாநடி படத்தை தொடர்ந்து தெலுங்கில் மீண்டும் நேரடியாக ஒரு படத்தில் நடிக்கிறார் துல்கர் சல்மான்.. இயக்குனர் ஹனு ராகவாபுடி இயக்கவுள்ள இந்தப்படம் குறித்த அறிவிப்பு, கடந்த வருடமே வெளியானாலும் இன்னும் படத்திற்கு டைட்டில் வைக்கப்படவில்லை.. தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மும்மொழிகள் தயாராகும் இந்த படம் 1964-ம் ஆண்டில் நடைபெறும் வகையில் ஒரு ப்ரீயட் காதல் கதையாக உருவாகவுள்ளது
இந்தப்படத்தில் லெப்டினென்ட் ராம் என்கிற ராணுவ அதிகாரியாக துல்கர் சல்மான் நடிக்கிறார். இந்தப்படத்தில் பூஜா ஹெக்டேவை கதாநாயகியாக நடிக்க வைக்கலாம் என கடந்த வருடமே சொல்லப்பட்டு வந்தது.. இந்தநிலையில் தற்போது சூப்பர் 60, பட்லா ஹவுஸ் ஆகிய படங்களில் நடித்த பாலிவுட் நடிகை மிருணாள் தாக்கூர் இந்தப்படத்தில் கதாநாயகியாக நடிப்பார் என தெரியவந்துள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என தெரிகிறது..