இன்றைய ரசிகர்கள் எப்போதும் இல்லாத அளவுக்கு புத்திசாலிகளாக உள்ளனர் : யாமி கவுதம் | மிரட்டலின் பேரிலேயே ஜாய் உடன் திருமணம்: குழந்தையை கவனிக்க தயார்: மாதம்பட்டி ரங்கராஜ் | ஜிவி பிரகாஷ் 100வது படத்தின் முதல் சிங்கிள் நாளை வெளியீடு | தி ராஜா சாப் ரிலீஸ் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த தயாரிப்பு நிறுவனம் | கேரள மாநில விருது: மகிழ்ச்சியை வெளிப்படுத்திய மம்முட்டி | ஒரே நேரத்தில் திரிஷ்யம் 3 மூன்று மொழிகளில் ரிலீஸா? : தெளிவாக குழப்பும் ஜீத்து ஜோசப் | 100 கோடி வசூலிக்குமா 'பாகுபலி தி எபிக்' | விஷால் மீது 'மகுடம்' முன்னாள் இயக்குனர் ரவி அரசு புகார் | மணிரத்னம் படத்தில் நடிக்க ஆசைப்படும் துருவ் | அஜித்துக்கு வில்லனாக நடிக்கலாமா? யோசிக்கும் விஜய்சேதுபதி |

மகாநடி படத்தை தொடர்ந்து தெலுங்கில் மீண்டும் நேரடியாக ஒரு படத்தில் நடிக்கிறார் துல்கர் சல்மான்.. இயக்குனர் ஹனு ராகவாபுடி இயக்கவுள்ள இந்தப்படம் குறித்த அறிவிப்பு, கடந்த வருடமே வெளியானாலும் இன்னும் படத்திற்கு டைட்டில் வைக்கப்படவில்லை.. தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மும்மொழிகள் தயாராகும் இந்த படம் 1964-ம் ஆண்டில் நடைபெறும் வகையில் ஒரு ப்ரீயட் காதல் கதையாக உருவாகவுள்ளது
இந்தப்படத்தில் லெப்டினென்ட் ராம் என்கிற ராணுவ அதிகாரியாக துல்கர் சல்மான் நடிக்கிறார். இந்தப்படத்தில் பூஜா ஹெக்டேவை கதாநாயகியாக நடிக்க வைக்கலாம் என கடந்த வருடமே சொல்லப்பட்டு வந்தது.. இந்தநிலையில் தற்போது சூப்பர் 60, பட்லா ஹவுஸ் ஆகிய படங்களில் நடித்த பாலிவுட் நடிகை மிருணாள் தாக்கூர் இந்தப்படத்தில் கதாநாயகியாக நடிப்பார் என தெரியவந்துள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என தெரிகிறது..