'தொடரும்' படத்தில் நடிப்பதற்கு முன் இயக்குனர் மீது ஷோபனாவுக்கு வந்த சந்தேகம் | அட்ஜஸ்ட்மென்ட் குறித்த மாலா பார்வதியின் கருத்துக்கு நடிகை ரஞ்சனி கண்டனம் | சுவர் ஏறி குதித்து குழந்தையை காப்பாற்றிய திஷா பதானியின் தங்கை : குவியும் பாராட்டுக்கள் | 18வது திருமண நாளில் 'பேமிலி' புகைப்படத்தைப் பகிர்ந்த ஐஸ்வர்யா ராய் | மகேஷ்பாபுவுக்கு நேரில் ஆஜராக அமலாக்கத் துறை நோட்டீஸ் | கதை நாயகனாக நடிக்கும் 'காக்கா முட்டை' விக்னேஷ் | 'நிழற்குடையில்' கதை நாயகியாக நடிக்கும் தேவயானி | கால் பாதத்தை டீ ஸ்டாண்ட் ஆக மாற்றிய மம்முட்டி ; வைரலாகும் புகைப்படம் | த்ரிஷ்யம்-3க்கு முன்பாக புதிய படத்தை ஆரம்பித்த ஜீத்து ஜோசப் | பிளாஷ்பேக்: காணாமல் போன நல்ல இயக்குனர் |
நான் ஈ பட நாயகனான நானி, தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர். தற்போது ஷியாம் சிங்கா ராய், ஆன்டே சுந்தரனிகி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். ஆகஸ்டு மாதத்திற்கு பிறகு இன்னொரு புதிய படத்தில் நடிக்கப்போகிறார். சுதாகர் செருகுரி என்பவர் தயாரிக்கும் அப்படத்தில் நடிக்க ரூ.14 கோடி சம்பளம் பேசியிருக்கிறாராம் நானி.
இதுவரை 10 முதல் 11 கோடி வரை சம்பளம் வாங்கி வந்த நானி நடிப்பில் இதற்கு முன்பு வெளியான மூன்று படங்கள் தொடர்ச்சியாக தோல்வியை தழுவி வந்துள்ளன. ஆனபோதிலும் தனது புதிய படத்தில் நடிக்க அவர் ரூ. 14 கோடி சம்பளம் பேசியிருப்பது தெலுங்கு சினிமா வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.