சுதீப் 47 படத்தை இயக்கப் போகும் 'மேக்ஸ்' இயக்குனர் | புதிய சாதனை படைத்த 'ஹரிஹர வீரமல்லு' டிரைலர் | இந்த வாரம் அப்பா, மகள் ; குரு, சிஷ்யன் படங்கள் மோதல் | லவ் மேரேஜ் படம் ஹிட்டா? : கணக்கு சொல்லாத படக்குழு | '96' இரண்டாம் பாகம் : விலக முடிவெடுத்த விஜய் சேதுபதி? | அபார்ட்மென்ட் வாங்கத் தவிக்கும் '3 பிஹெச்கே', அதைவிட்டு போகச் சொல்லும் 'பறந்து போ'!! | டியூட் படத்தின் டிஜிட்டல் உரிமை இத்தனை கோடியா? | நடிகைகள் உடன் தனுஷ் பார்ட்டி : போட்டோ வைரல் | ‛கூலி' படத்தின் வெளிநாட்டு உரிமை புதிய சாதனை | மனதை கொள்ளையடிக்கும் மலரே... தினமே... : யாதும் அறியான் முதல் பாடல் வெளியீடு |
பிரபல மலையாள நடிகை கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் மலையாள முன்னணி நடிகர் திலீப் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். இந்த வழக்கு 2019ம் ஆண்டு முதல் தனி நீதிமன்ற விசாரணையில் உள்ளது. விசாரணையை உச்சநீதிமன்றம் விதித்த காலகெடுவுக்குள் முடிக்கவில்லை. இதனால் தனி நீதிமன்றம் மேலும் 6 மாதம் கால அவகாசம் கேட்டு உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது.
இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை முடிக்க தனி நீதிமன்றத்துக்கு மேலும் 6 மாதங்கள் அவகாசம் அளித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதோடு, இனிமேல் நீட்டிப்பு வழங்கப்பட மாட்டாது. இதுவே கடைசி வாய்ப்பு எனவும் கூறிவிட்டது.
இதுவரை 2 முறை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.