'தி பேமிலி மேன் 3' ரிலீஸ்: பதட்டமாகவும், சந்தோஷமாகவும் இருக்கு: மனோஜ் பாஜ்பாய் | என் பெயரில் வரும் அழைப்புகள், மெசேஜ்கள் போலியானவை: தனுஷ் மானேஜர் அறிக்கை | பெண்களை இழிவாக பேசும் இயக்குனர்: திவ்யபாரதி புகார் | 'ஆரோமலே' படத்திற்கு எதிராக வழக்கு | பிளாஷ்பேக்: நடிகையின் பிரச்னையை பேசிய முதல் படம் | தமிழில் 4 ஆண்டுக்கு பின் நாயகியாக நடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன் | எனக்கு பாராட்டு விழா வேணாம்: தயாரிப்பாளர் தாணு | வீட்டை வைத்து கடன் வாங்கி படம் தயாரித்ததுஏன்? ஆண்ட்ரியா | 'வாழு, வாழ விடுங்கள்': கிண்டல், கேலிகளுக்கு கீர்த்தி சுரேஷ் பதில் | அஜித் அடுத்த பட அறிவிப்பு - தொடரும் தாமதம் |

பிரபல மலையாள நடிகை கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் மலையாள முன்னணி நடிகர் திலீப் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். இந்த வழக்கு 2019ம் ஆண்டு முதல் தனி நீதிமன்ற விசாரணையில் உள்ளது. விசாரணையை உச்சநீதிமன்றம் விதித்த காலகெடுவுக்குள் முடிக்கவில்லை. இதனால் தனி நீதிமன்றம் மேலும் 6 மாதம் கால அவகாசம் கேட்டு உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது.
இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை முடிக்க தனி நீதிமன்றத்துக்கு மேலும் 6 மாதங்கள் அவகாசம் அளித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதோடு, இனிமேல் நீட்டிப்பு வழங்கப்பட மாட்டாது. இதுவே கடைசி வாய்ப்பு எனவும் கூறிவிட்டது.
இதுவரை 2 முறை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.




