மோகன்லால், குஷ்பூ மகள்களின் அறிமுக பட டைட்டிலில் ஒற்றுமை | புறக்கணிப்பு : நேற்று அனுபமா... இன்று ஆண்ட்ரியா | தேர்வுகள் ஆரம்பம் : தியேட்டர்களுக்கு சிக்கல் | பஹத் பாசிலின் தெலுங்கு படத்தில் இணைந்த 'எக்கோ' பட வில்லன் | மீண்டும் இணையும் விஜய் சேதுபதி - தியாகராஜன் குமாரராஜா! நாளை பர்ஸ்ட் லுக்! | 'துரந்தர்' 2ம் பாகத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்! - பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் | 'இருமுடி' படத்தில் காவேரி ஆக பிரியா பவானி சங்கர்! | பாலகிருஷ்ணா 111வது படத்தில் நயன்தாரா மாற்றமில்லை! | நானி, வெங்கி அட்லூரி கூட்டணி படத்தின் கதாநாயகி யார் தெரியுமா? | பான் இந்தியா படங்களோடு மோதும் கென் கருணாஸின் 'யூத்' |

சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் அண்ணாத்த படத்தில் அவருடன் மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ்ராஜ், சூரி என பலர் நடிக்க டி.இமான் இசையமைக்கிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த டிசம்பரில் ஐதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வந்தபோது யூனிட் உள்ள 4 நபர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதோடு, ரஜினிக்கும் ரத்த அழுத்த மாறுபாடு ஏற்பட்டதால் படப்பிடிப்பு உடனடியாக நிறுத்தப்பட்டது.
அதையடுத்து அண்ணாத்த வருகிற தீபாவளிக்கு ரிலீஸ் என்று பட நிறுவனம் அறிவித்த நிலையில் ரஜினி தவிர மற்ற நடிகர்-நடிகைகளின் காட்சிகள் அனைத்து படமாக்கப் பட்டு விட்டதால் ரஜினி எப்போது வருகிறாரோ அப்போது தான் மீண்டும் அண்ணாத்த படப்பிடிப்பு என்று சொல்லி வந்தார் சிறுத்தை சிவா.
இந்நிலையில், மார்ச் 15-ந்தேதில் முதல் மீண்டும் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடக்கும் படப்பிடிப்பில் கலந்து கொள்ள ரஜினி தயாராகி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதன்பிறகு தமிழ்நாட்டில் பொள்ளாச்சி உள்பட சில பகுதிகளில நடக்கும் படப்பிடிப்புகளிலும் அடுத்தடுத்து கலந்து கொள்கிறாராம் ரஜினி. இதனால் மார்ச், ஏப்ரலோடு அண்ணாத்த படப்பிடிப்பு முடிந்து விடும் என்று தெரிய வந்துள்ளது.