இப்போதைக்கு நான் சாக விரும்பவில்லை : விரக்தியில் பிரபல பாடகர் | நாகசைதன்யா நடிக்கும் புதிய வெப்சீரிஸ் ‛மாய சபா' | தொடரும் வில்லத்தனம் : வெளியான மம்முட்டியின் கலம்காவல் இரண்டாவது லுக் | மோகன்லாலுக்கு பரிசாக கால்பந்து வீரர் மெஸ்ஸி கையெழுத்திட்டு அனுப்பிய ஜெர்ஸி | மலையாள வில்லன் நடிகர் மீதான போதை வழக்கில் போலீசாருக்கு புதிய சிக்கல் | மாரி செல்வராஜ் - தனுஷ் கூட்டணியில் ஏஆர் ரஹ்மான் | குட் பேட் அக்லி 11 நாள் வசூல் முழு விவரம் | காதலருடன் (?) திருப்பதியில் தரிசனம் செய்த சமந்தா | பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி |
ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், மீனா மற்றும் பலர் நடித்து மலையாளத்தில் 2013ம் ஆண்டு வெளிவந்து பெரும் வெற்றி பெற்ற படம் 'த்ரிஷயம்'. அப்படத்தை தமிழில் கமல்ஹாசன், கவுதமி நடிக்க 2015ல் 'பாபநாசம்' என்ற பெயரில் ரீமேக் செய்து வெளியிட்டார்கள். தமிழிலும் இப்படம் வெற்றி பெற்றது.
தற்போது 'த்ரிஷ்யம்' படத்தின் இரண்டாம் பாகத்தை அதே குழு உருவாக்கியுள்ளது. படம் பிப்ரவரி 19ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. முதல் பாகக் கதையின் தொடர்ச்சியாகத்தான் இரண்டாம் பாகத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளதாம்.
முதல் பாகத்தை கமல்ஹாசன் ரீமேக் செய்தது போல இரண்டாம் பாகத்தையும் ரீமேக் செய்வாரா என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். ஆனால், கமல்ஹாசன் ஏற்கெனவே ஆரம்பித்த 'இந்தியன் 2, விக்ரம், தலைவன் இருக்கிறான்' ஆகிய படங்களை முடித்தாக வேண்டும். அதற்குப் பிறகே அவர் 'பாபநாசம்' படத்தின் இரண்டாம் பாகத்தைப் பற்றி யோசிக்க வேண்டும்.
அப்படியே இரண்டாம் பாகம் உருவானாலும் கவுதமி நடிக்க வாய்ப்பில்லை. இருவரும் பிரிந்துவிட்டார்கள். எனவே, வேறு ஒரு நடிகையை நடிக்க வைக்க வேண்டும். அப்படி நடிக்க வைத்தால் முதல் பாகத்தின் தொடர்ச்சியாக எடுப்பது பொருத்தமாக இருக்காது. எனவே, 'பாபாநாசம் 2' படம் உருவாக வாப்பில்லை என்றே தோன்றுகிறது.