ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நடிகரும், மக்கள் நீதி மையம் தலைவருமான கமல்ஹாசனுக்கு காலில் அறுவை சிகிச்சை நடந்துள்ளது. அறுவை சிகிச்சைக்கு பின் அவர் நலமாக இருப்பதாக மகள்கள் ஸ்ருதிஹாசன், அக்ஷராஹாசன் தெரிவித்துள்ளனர்.
சில ஆண்டுகளுக்கு தனது வீட்டின் மாடிப்படியில் வழுக்கி விழுந்ததில் நடிகர் கமல்ஹாசனுக்கு காலில் அடிப்பட்டது. இதற்காக அப்போதே சிகிச்சை மேற்கொண்டார். பின்னர் ஒரு அறுவை சிகிச்சையும் அவருக்கு நடந்தது. அதன்பின் அரசியல், சினிமா என பிஸியாக இருந்தார். சில தினங்களுக்கு முன், ''மீண்டும் காலில் இன்னொரு அறுவை சிகிச்சை செய்ய வேண்டி இருக்கிறது. அதனால் சில நாட்கள் ஓய்வில் இருக்க போகிறேன்'' என கமல் தெரிவித்து இருந்தார். இந்நிலையில் அந்த அறுவை சிகிச்சை இன்று(ஜன., 19) நடந்துள்ளது.
இதுகுறித்து கமலின் மகள்களும், நடிகைகளுமான ஸ்ருதிஹாசன், அக்ஷராஹாசன் வெளியிட்ட அறிக்கை : ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் டாக்டர் ஜே.எஸ்.என்.மூர்த்தி ஒருங்கிணைப்பில் எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் மோகன் குமார் தலைமையில் அப்பாவிற்கு காலில் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை நடந்தது. அப்பா நலமாக உற்சாகமாக இருக்கிறார். மருத்துவர்களும், மருத்துவமனை நிர்வாகமும் நல்லமுறையில் அவரை பார்த்துக் கொள்கிறார்கள். நான்கைந்து நாட்களுக்கு பின் அப்பா வீடு திரும்புவார். அதன்பின் சில நாட்கள் ஓய்வுக்கு பின் மீண்டும் மக்களை சந்திப்பார். அனைவரது அன்பு, பிரார்த்தனைக்கு எங்களது நன்றி.
இவ்வாறு தெரிவித்துள்ளனர்.