தனுஷ் 55ல் இணைந்தார் ஸ்ரீலீலா | போட்டோகிராபர் செய்த செயல் : கசப்பான அனுபவம் பகிர்ந்த ஐஸ்வர்யா ராஜேஷ் | அட்லி, அல்லு அர்ஜுன் படப்பிடிப்பில் பிப்ரவரி முதல் இணையும் ஜான்வி கபூர் | ரஜினி 173வது படத்தின் கதை ஹாலிவுட் படத்தின் தழுவலா? | ஜூலையில் வெளியாகும் சூர்யா 46வது படம் | பெத்தி படத்தில் சிறப்பு பாடலுக்கு நடனமாடும் மிருணாள் தாக்கூர் | பிளாஷ்பேக் : இரவு காட்சிகளை பகலில் படமாக்கிய முதல் படம் | 2027 ஏப்ரல் 7 : வாரணாசி வெளியீட்டு தேதி அறிவிப்பு | கேரளா ஸ்டோரி இரண்டாவது பாகமும் பரபரப்பு கிளப்புகிறது | வேள்பாரி கதையில் நடிக்கப்போவது யார்? : ரஜினிக்கு கவுரவ வேடமா? |

நடிகர் விஜய்யின் தந்தையான டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகரன், விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியை பதிவு செய்து சட்டசபை தேர்தலில் போட்டியிட தயாரானபோது அதை தடுத்து நிறுத்தினார் விஜய். அதையடுத்து தனது அனுமதி இன்றி விஜய் மக்கள் இயக்கத்தின் பெயர், கொடி மற்றும் தனது புகைப்படத்தை யாராவது பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்த விஜய், சிலர் மீது சட்ட நடவடிக்கையும் எடுத்தார்.
அதையடுத்து அப்போதைக்கு கட்சி தொடங்கும் முயற்சிகளை தள்ளி வைத்த எஸ்.ஏ.சி., தற்போது மீண்டும் விஜய் மக்கள் இயக்கத்தின் மீது அதிருப்தியில் உள்ள ரசிகர்களை ஒன்றிணைத்து, புதிய கட்சியை தொடங்கும் வேலையில் இறங்கி உள்ளார்.
இந்நிலையில், விஜய் மக்கள் இயக்கத்தில் உள்ள சில அதிருப்தி நிர்வாகிகளை களை எடுத்துள்ள விஜய், அதையடுத்து மக்கள் இயக்கத்தின் இரண்டாவது நிர்வாகிகள் பட்டியலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார். அந்த பட்டியலில், புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மாவட்ட, இளைஞரணி, தொண்டரணி, மாணவரணி, மகளிரணி, விவசாய அணி, மீனவரணி, வழக்கறிஞர் அணி, வர்த்தக அணி போன்ற அணிகளின் தலைவர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளது.
அதோடு, மேற்கண்ட நிர்வாகிகளின் ஆலோசனைப்படி அவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்து விஜய் மக்கள் இயக்கத்தை மேன்மேலும் சிறப்பிக்குமாறு ரசிகர்கள், ரசிகைகளை கேட்டுக் கொண்டுள்ளார் விஜய். மேலும், எனது புகைப்படம், இயக்கத்தின் பெயர்- மற்றும் கொடி ஆகியவற்றை மாநில- மாவட்ட பொறுப்பாளர், மாவட்ட தலைவர் மற்றும் அணித்தலைவர்களின் அனுமதி பெற்றே பயன்படுத்த வேண்டும். அதனை மீறுவோர் மீது இயக்கத்தின் சார்பாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார் விஜய்.