மிருணாள் தாகூரை இயக்கும் தனுஷ் | பிளாஷ்பேக்: இயக்குநர் கே சுப்ரமணியத்தை நடிகராக்கிப் பார்த்த “அனந்தசயனம்” | ஹீரோவாக நடிக்கப் போகிறாரா சாய் அபயங்கர் | வெங்கடேஷ் உடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ் | மே 1 பிறந்தநாளில் அஜித் 64 அறிவிப்பு வருமா ? | ராமதாஸ் பயோபிக் 'அய்யா' கைவிடப்பட்டதா? | தமிழகத்தின் முதல் டால்பி தியேட்டரைத் திறந்து வைத்த கமல்ஹாசன் | 2வது முறையாக பாலகிருஷ்ணா உடன் இணையும் காஜல் அகர்வால் | 'பெத்தி' படத்தில் சம்யுக்தா | 29 படத்தின் ஓடிடி உரிமையை கைபற்றிய நெட்பிளிக்ஸ் |

சிவகார்த்திகேயன் உடன் நடித்த பராசக்தி படத்திற்கு பிறகு தனுஷ் 55வது படத்தில் நடித்து வருகிறார் ஸ்ரீ லீலா. அதோடு தெலுங்கில் பவன் கல்யாண் ஜோடியாக உஸ்தாத் பகத்சிங் என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்தவாரம் மார்ச் 19ம் தேதி திரைக்கு வரும் இந்த படத்தை ஹரிஷ் சங்கர் இயக்கி உள்ளார். இப்படத்தில் பார்த்திபன், ராசி கண்ணா ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். இந்த நிலையில், பவன் கல்யாணை பாராட்டி உள்ளார் ஸ்ரீ லீலா.
அதில், பவன் கல்யாண் உடன் பணி புரிந்தது எனக்கு ஒரு சிறந்த கற்றல் பயணமாக அமைந்தது. அவருடன் படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் போதெல்லாம் எப்போதும் நேர்மறையாக நடந்ததாக கூறியுள்ளார். மேலும், அவர் ஒரு உண்மையான இயற்கை ஆர்வலர். மிகவும் இரக்கமுள்ள ஆளுமை குணம் கொண்டவர். தன்னை மட்டுமின்றி தன்னை சுற்றி இருப்பவர்களையும் கவனித்துக் கொள்வார். தேவைப்படும் உதவிகளை செய்வார். அனைவரையும் ஊக்கப்படுத்துவார். அந்த வகையில் பவன் கல்யாண் சினிமாவில் மட்டுமின்றி வெளி உலகத்திலும் ஒரு எழுச்சி ஊட்டும் நபராக தன்னை வெளிப்படுத்திக் கொண்டு வருகிறார் புகழ்ந்துள்ளார் ஸ்ரீ லீலா.