எப்போ கல்யாணம் பண்ணுவீங்க? அமீர் - பாவ்னிக்கு ரசிகர்கள் கேள்வி | 'டிராகான் Vs நி.எ.மே.எ.கோபம்' - இளைஞர்களைக் கவரப் போவது யார்? | ஒரு மணி நேரத்திலேயே பொய் பேசிய கயாடு லோஹர் | கன்னடர்களின் கோபத்திற்கு ஆளான ராஷ்மிகா மந்தனா | ஒன்பது படங்களில் ஒன்றாவது வசூலைக் குவிக்குமா ? | இசையமைப்பாளர் தமனுக்கு கார் பரிசளித்த பாலகிருஷ்ணா | பட்டங்கள் வாழ்க்கைக்கு உதவுவதில்லை : ராஷ்மிகா | ஷங்கர் இயக்கத்தில் துருவ் விக்ரம்? | கேங்கர்ஸ் படத்தில் ஜந்து கெட்டப்பில் வடிவேலு! | பிளாஷ்பேக்: டைட்டில் பிரச்னை காரணமாக சிரஞ்சீவி படத்தில் இருந்து விலகிய ஸ்ரீதேவி |
விஜய் சேதுபதி, பார்த்திபன், ராசிகண்ணா, மஞ்சிமா மோகன், சம்யுக்தா நடிப்பில் உருவாகி உள்ள படம் துக்ளக் தர்பார். டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கியுள்ள இந்த படத்தின் டீசர் நேற்று வெளியானது. அதையடுத்து தற்போது அந்த டீசர் குறித்த சில சர்ச்சைகளும் சோசியல் மீடியாவில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.
அதாவது, துக்ளக் தர்பார் படத்தில் அரசியல்வாதியாக நடிக்கும் பார்த்திபனின் பெயர் ராசிமான் என்றும், அவர் மக்கள் முற்போக்கு முன்னேற்ற கழகம் என்ற கட்சியை நடத்துவதாகவும் அந்த டீசரில் ஒரு போஸ்டர் இடம்பெற்றது. அதோடு, புலி உள்ள வரை உங்கள் புகழ் இருக்கும் என்ற வாசகமும் அதில் இடம்பெற்றிருந்தது. இது தான் தற்போது சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. இதுகுறித்து சோசியல் மீடியாவில் பரபரப்பு விவாதமாகியிருக்கிறது.
இந்நிலையில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த மாநில ஒருங்கிணைப்பாளர் வெற்றிக் குமரன் வெளியிட்ட செய்தி : துக்ளக் தர்பார் திரைப்பட முன்னோட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அண்ணன் சீமானுக்கு எதிரானது போல சில காட்சிகள் இடம் பெற்றிருந்தது எங்களை மிகுந்த மனவேதனைக்குள்ளாக்குகிறது. இதுபற்றி படத்தின் தயாரிப்பாளர் லலித்குமாரிடம் கேட்டபொழுது "தெரியாமல் நடந்து விட்டது அந்தமாதிரி காட்சிகளை சிஜி பயன்படுத்தி படத்திலிருந்து முழுவதுமாக நீக்கி விடுகிறேன் என உறுதி அளித்துள்ளார்.
இருப்பினும் இம்மாதிரியான காட்சிகளை எடுத்த இயக்குனர், இதில் நடித்த நடிகர்களை வன்மையாகக் கண்டிப்பதோடு, இந்தக்காட்சிகளோடு இப்படம் திரைக்கு வருமாயின் உலகம் முழுதும் ஒரு காட்சி கூட திரையரங்குகளில் ஓடாது என்பதை எச்சரிக்கையோடு தெரிவித்துக் கொள்கிறோம். இழவுவீட்டில் இருக்கும் எங்களிடம் வந்து வம்பிழுக்கும் வேலையை விடுங்கள்.. இல்லையேல் இந்தக் கலைத்துறையிலிருந்து வெகுவிரைவில் அப்புறப்படுத்தப்படுவீர்கள்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.