தீபிகாவுக்கு ஆதரவாகப் பேசினாரா அஜய் தேவ்கன்? | அயோத்தியில் நான்காவது 'மனை' வாங்கிய அமிதாப்பச்சன் | தெலங்கானா மாநில சினிமா விருது வென்ற எஸ்ஜே சூர்யா, நிவேதா தாமஸ் | கமல் சாரை பற்றி தப்பா பேசாதீங்க! - சர்ச்சை குறித்து ஆவேசமாக பேசிய சிவராஜ்குமார் | கார்த்தியின் 'கைதி- 2' படப்பிடிப்பு: டிசம்பர் மாதத்தில் தொடங்குகிறது! | அபிஷன் ஜீவிந்த் மூலம் எனக்கு கிடைத்த புகழ்! - சசிகுமார் நெகிழ்ச்சி | சூர்யா 45வது படம் பண்டிகை நாளில் வெளியாகும்! - தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தகவல் | பெங்களூரு காவல் நிலையத்தில் கமல்ஹாசன் மீது புகார்! வழக்கை பதிவு செய்யாத போலீசார் | 'பாஸ் என்கிற பாஸ்கரன் 2' வருமா? | ஹீரோயினை விட ஒரு பாடலுக்கு ஆடும் ராஷ்மிகாவுக்கு அதிக சம்பளம் |
சிம்பு நடித்த வந்தா ராஜாவாத்தான் வருவேன் படம் வெளியாகி 2 வருடம் ஆகும் நிலையில், அடுத்தபடியாக அவர் நடித்துள்ள ஈஸ்வரன் படம் ஜனவரி 14-ல் திரைக்கு வருகிறது. இதனால் இப்படத்தை அவரது ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்துள்ளனர். அதேசமயம் இப்படம் வெளியீடு தொடர்பாக சிக்கலும் ஓடிக் கொண்டு இருக்கிறது. இதனால் படம் வெளியாகுமா, ஆகாதா என்ற குழப்பமான நிலை நீடிக்கிறது.
இந்நிலையில் ஈஸ்வரன் படத்திற்கு முன்பே வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்க தொடங்கிய மாநாடு படத்தின் படப்பிடிப்பு சில பல பிரச்னைகளை கடந்து மீண்டும் துவங்கி நடந்து வருகிறது. ஏற்கனவே படத்தின் சில போஸ்டர்கள் ரசிகர்களை ஈர்த்த நிலையில் இப்போது பொங்கல் அன்று படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாக இருக்கிறது.