2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

'உத்தம புத்திரன்' வெற்றி, 'தர்ம வீரன்' தோல்வி படத்திற்கு பிறகு பி.யூ.சின்னப்பா ஹீரோவாக நடித்த படம், 'ஆர்யமாலா'. பக்ஷிராஜா ஸ்டூடியோ தயாரித்தது. புராணக் கதையின் அடிப்படையில் உருவான படம் இது.
சிவபெருமான் தேவலோக நந்தவனத்தைக் காவல் காப்பதற்காக காத்தவராயனை உருவாக்கினார். அங்கு வரும் சப்தகன்னிகளில் இளங்கன்னி என்ற தேவலோகப் பெண்ணைக் காதலிக்கிறான், காத்தவராயன். காதலிக்க முயற்சிக்கும்போது, அவள் தன்னை தண்ணீரில் மூழ்கடித்துக் கொள்கிறாள். பின் அவள் மீண்டும் இளவரசியாகப் பிறக்கிறாள். ஆர்யமாலா என்ற அவளை, காத்தவராயன் மீண்டும் காதலிக்கிறான்.
இப்படி இளங்கன்னி தண்ணீர் முழ்கி பிறப்பதும், பின்பு காத்தவராயன் காதலிப்பதுமாக இருந்து கடைசியில் இதற்கு பகவான் விஷ்ணு எப்படி தீர்வு காண்கிறார் என்பதுதான் படத்தின் கதை. காத்தவராயனாக பி.யு.சின்னப்பா நடித்தார். ஆர்யமாலாவாக எம்.எஸ்.சரோஜினியும் நடித்தார். 1941ம் ஆண்டு வெளியான இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
இந்தப் படம் 1958ம் ஆண்டு 'காத்தவராயன்' என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. சிவாஜி கணேசன், சாவித்திரி, கண்ணாம்பா, எம்.என்.ராஜம், ஈ.வி.சரோஜா, தங்கவேலு, சந்திரபாபு நடித்த இதை டி.ஆர்.ராமண்ணா தனது ஆர்.ஆர்.பிச்சர்ஸ் மூலம் தயாரித்து இயக்கினார். இப்படமும் வெற்றி பெற்றது.
இந்த படத்தில் முதலில் காத்தவராயனாக எம்ஜிஆர் நடிப்பதாக இருந்தது. படத்தில் சில மாறுதல்களை எம்ஜிஆர் செய்யச் சொன்னார். குறிப்பாக பழைய ஆர்யமாலாவில் காத்தவராயன் கொஞ்சம் பயந்த சுபாவம் உள்ளவராக நடித்திருப்பார். அதை மாற்றி அவனை வீரனாக காட்ட வேண்டும், நிறைய சண்டை காட்சிகள் வைக்க வேண்டும் என்றார்.
இதனால் இயக்குனர் ராமண்ணாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக எம்ஜிஆர் படத்தில் இருந்து விலகினார். இதனால் சிவாஜி நடிக்க வைக்கப்பட்டார். முன்பு வந்த ஆர்யமாலாவை விட அதிக காட்சிகள், அதிக பாடல்கள், நடனங்கள் சேர்த்து இந்த படம் உருவானது. பெரிய வெற்றியும் பெற்றது.