தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

'உத்தம புத்திரன்' வெற்றி, 'தர்ம வீரன்' தோல்வி படத்திற்கு பிறகு பி.யூ.சின்னப்பா ஹீரோவாக நடித்த படம், 'ஆர்யமாலா'. பக்ஷிராஜா ஸ்டூடியோ தயாரித்தது. புராணக் கதையின் அடிப்படையில் உருவான படம் இது.
சிவபெருமான் தேவலோக நந்தவனத்தைக் காவல் காப்பதற்காக காத்தவராயனை உருவாக்கினார். அங்கு வரும் சப்தகன்னிகளில் இளங்கன்னி என்ற தேவலோகப் பெண்ணைக் காதலிக்கிறான், காத்தவராயன். காதலிக்க முயற்சிக்கும்போது, அவள் தன்னை தண்ணீரில் மூழ்கடித்துக் கொள்கிறாள். பின் அவள் மீண்டும் இளவரசியாகப் பிறக்கிறாள். ஆர்யமாலா என்ற அவளை, காத்தவராயன் மீண்டும் காதலிக்கிறான்.
இப்படி இளங்கன்னி தண்ணீர் முழ்கி பிறப்பதும், பின்பு காத்தவராயன் காதலிப்பதுமாக இருந்து கடைசியில் இதற்கு பகவான் விஷ்ணு எப்படி தீர்வு காண்கிறார் என்பதுதான் படத்தின் கதை. காத்தவராயனாக பி.யு.சின்னப்பா நடித்தார். ஆர்யமாலாவாக எம்.எஸ்.சரோஜினியும் நடித்தார். 1941ம் ஆண்டு வெளியான இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
இந்தப் படம் 1958ம் ஆண்டு 'காத்தவராயன்' என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. சிவாஜி கணேசன், சாவித்திரி, கண்ணாம்பா, எம்.என்.ராஜம், ஈ.வி.சரோஜா, தங்கவேலு, சந்திரபாபு நடித்த இதை டி.ஆர்.ராமண்ணா தனது ஆர்.ஆர்.பிச்சர்ஸ் மூலம் தயாரித்து இயக்கினார். இப்படமும் வெற்றி பெற்றது.
இந்த படத்தில் முதலில் காத்தவராயனாக எம்ஜிஆர் நடிப்பதாக இருந்தது. படத்தில் சில மாறுதல்களை எம்ஜிஆர் செய்யச் சொன்னார். குறிப்பாக பழைய ஆர்யமாலாவில் காத்தவராயன் கொஞ்சம் பயந்த சுபாவம் உள்ளவராக நடித்திருப்பார். அதை மாற்றி அவனை வீரனாக காட்ட வேண்டும், நிறைய சண்டை காட்சிகள் வைக்க வேண்டும் என்றார்.
இதனால் இயக்குனர் ராமண்ணாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக எம்ஜிஆர் படத்தில் இருந்து விலகினார். இதனால் சிவாஜி நடிக்க வைக்கப்பட்டார். முன்பு வந்த ஆர்யமாலாவை விட அதிக காட்சிகள், அதிக பாடல்கள், நடனங்கள் சேர்த்து இந்த படம் உருவானது. பெரிய வெற்றியும் பெற்றது.