மூணு குழந்தைகள் பெத்துக்கணும்... ஜான்வி கூறும் காரணம் | இரண்டாவது வாய்ப்பில் வெற்றி பெறுவாரா ருக்மிணி வசந்த்? | ‛கட்டா குஸ்தி 2' படம் துவங்கியது | சுதீப்பின் அடுத்த படத் தலைப்பு 'மார்க்' | தெலுங்கில் 100 கோடி வியாபாரத்தில் 'காந்தாரா சாப்டர் 1' | ரசிகர்களின் எதிர்பார்ப்புக்காக மட்டுமே படம் எடுக்க மாட்டேன் : லோகேஷ் கனகராஜ் | நல்ல கதாபாத்திரம் கிடைப்பதுதான் ஒரு நடிகைக்கு அங்கீகாரம்: மிர்னா மேனன் | பிளாஷ்பேக்: ரஜினி படத்தை தயாரித்து, இயக்கிய கன்னட நடிகர் | பிளாஷ்பேக்: ஹாலிவுட் ரீமேக்கில் நடிக்க மறுத்த பானுமதி | நடப்பு தயாரிப்பாளர் சங்க தேர்தல் : அனைத்து நிர்வாகிகளும் போட்டியின்றி தேர்வு |
நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இதைத்தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தனது 25வது படத்தில் நடிக்கவுள்ளார். இதனை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பதாக தகவல்கள் ஏற்கனவே வெளியானது. நேற்றைய தினம் சீமான் உடன் சிவகார்த்திகேயன் உள்ள போட்டோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது. இது குறித்து பல கதைகள் இணையதள வாசிகளால் பின்னப்பட்டது.
நமக்கு கிடைத்த தகவலின்படி, சிவகார்த்திகேயன் 25வது படம் அரசியல் கதை களத்தை மையப்படுத்தி உருவாகிறதாம். இதில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் சீமானை நடிக்க வைக்க தான் சிவகார்த்திகேயன் நேரில் சந்தித்துள்ளார் என கூறப்படுகிறது.