நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி | சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் கயாடு லோகர், கல்யாணி பிரியதர்ஷன் | ஜப்பானில் தனுஷ், மாரி செல்வராஜ் படத்தின் படப்பிடிப்பு | சர்தார் 2 படப்பிடிப்பு நிறைவு பெற்றது |
அமரர் கல்கி எழுதிய மிகப்பெரிய வரலாற்று நாவலான 'பொன்னியின் செல்வன்', புத்தக விரும்பிகளின் மனதை கவர்ந்த நாவல். இதை படமாக்கி வரும் இயக்குனர் மணிரத்னம், இதை தனது கனவு படமாகவே இயக்குகிறார். பாலிவுட்டின் ஐஸ்வர்யா ராய் உட்பட, தென்னிந்திய முன்னணி நட்சத்திரங்கள் பலரும் இதில் நடிக்கின்றனர்.. ஏற்கனவே சில நாட்கள் நடந்த படப்பிடிப்பு கொரோனா தாக்கம் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் தற்போது ஐதராபாத் ராமோஜி ராவ் பிலிம்சிட்டியில் மீண்டும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது.
இந்தப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் ரகுமான், இந்த தகவலை உறுதி செய்துள்ளார். முதல்நாள் படப்பிடிப்பில் கலந்துகொண்ட அனுபவத்தை தனது சோஷியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்துகொண்டுள்ள ரகுமான், “பொன்னியின் செல்வன் படப்பிடிப்பில் இன்று முதல் கலந்து கொண்டுள்ளேன்.. முதல்நாள் முதல் காட்சியே, ஐஸ்வர்யா ராயுடன் நடித்ததில் மிகப்பெரிய சந்தோஷத்தில் இருக்கிறேன். படக்குழுவினர் உத்தரவு காரணமாக புகைப்படங்களை பகிர முடியவில்லை நண்பர்களே” என குறிப்பிட்டுளார். நடிகர் ரகுமான் மணிரத்னம் டைரக்சனில் நடிப்பதும், ஐஸ்வர்யா ராயுடன் இணைந்து நடிப்பதும் இதுதான் முதன்முறை என்பது குறிப்பிடத்தகது. .