ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
கொரோனா தளர்வுகளுக்குப் பிறகு கேரளாவில் இம்மாதம் 5ம் தேதி முதல் தியேட்டர்களைத் திறக்க அரசு அனுமதி அளித்தது. 50 சதவீத இருக்கைகள், இரவு நேரக் காட்சிகள் கிடையாது மற்றும் சில சலுகைகளுக்கு கோரிக்கை ஆகியவற்றை முன் வைத்து தியேட்டர்களைத் திறக்க மாட்டோம் என மலையாளத் திரையுலகத்தினர் அறிவித்தார்கள்.
தியேட்டர்கள் திறக்கப்படாத காரணத்தால், விஜய் நடித்துள்ள 'மாஸ்டர்' திரைப்படத்தை கேரளாவில் திரையிட முடியாத சூழல் உருவாகியது. மலையாளத் திரையுலகத்தில் ஆதிக்கம் செலுத்தி வரும் சிலர் வேண்டுமென்றே 'மாஸ்டர்' படத்தை வெளியிடுவதைத் தடுக்கவே இப்படி ஒரு போராட்டத்தை அறிவித்ததாகவும் விஜய் ரசிகர்களிடம் தகவல் பரவியது.
இந்நிலையில் இன்று கேரள முதல்வர் பினராயி விஜயனைச் சந்தித்த மலையாளத் திரையுலகினர் அவர்களது கோரிக்கைகளுக்கு முதல்வர் உறுதி அளித்ததைத் தொடர்ந்து தியேட்டர்களைத் திறக்க முடிவெடுத்துள்ளனர். எனவே, தியேட்டர்களைத் திறப்பது பற்றிய முடிவை கேரளா பிலிம் சேம்பர் விரைவில் அறிவிக்க உள்ளது. 'மாஸ்டர்' படம் வெளியாகும் ஜனவரி 13 முதல் தியேட்டர்கள் திறக்கப்படலாம் எனத் தெரிகிறது.