அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி |
தமிழ்நாட்டில் தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி அளித்து தமிழக அரசு நேற்று உத்தரவு பிறப்பித்தது. அதற்கு திரையுலகினர் பலர் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். சமூக ஆர்வலர்கள், மருத்துவர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள்.
ஒரு சில திரையுலகினரும் தியேட்டர்களில் 100 சதவீத இருக்கை அனுமதி வழங்கப்பட்டதற்கு எதிர் கருத்துக்களை முன் வைத்துள்ளார்கள். நடிகையும், இயக்குனருமான லட்சுமி ராமகிருஷ்ணன் டாக்டர் ஒருவரின் முகப்புத்தகப் பதிவை டுவிட்டரில் பகிர்ந்து அவருடைய சொந்த கருத்துக்களையும் பதிவிட்டுள்ளார்.
“டாக்டர்களுக்கு திரையுலகம் என்ன நியாயத்தைக் கொடுக்கப் போகிறது ?, பணத்திற்காக வாழ்க்கையை வர்த்தகமாக்குவது ?, பொது போக்குவரத்து இயங்குகிறது ? ஆனால், மக்கள் கவலைப்படுவதில்லை என்பது தர்க்கமான ஒரு வாதம். தமிழ்நாடு நன்றாகவே இருந்து வருகிறது. ஆனால், தியேட்டர்களில் 50 சதவீத அனுமதி மட்டும் வழங்கலாமே, மக்களின் உடல்நலம் மிகவும் முக்கியமானது.
திரையுலகம் வாழ வேண்டும் என்று கருதினால் பெரிய ஹீரோக்கள் அவர்களது சம்பளத்தைக் குறைத்துக் கொள்ளட்டும். தயாரிப்பாளர்களுக்கு சுமையாக இருப்பதை நிறுத்துங்கள். அந்த வகையில் தொழிலை நடத்த முடியும். தினசரி ஊதியம் பெறுபவர்களுக்கும் வாழ்வாதாரத்தைக் கொடுக்க முடியும். 50 சதவீத அனுமதியிலேயே தேவையான வருவாயைப் பெற இயலும்.
தியேட்டர் உரிமையாளர்கள் கடினமான ஒரு நேரத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள், ஏற்றுக் கொள்கிறேன். அதே போல வேறு பல தொழில்களும் உள்ளன. மக்களின் உடல்நலத்திற்கு எந்த ஊறும் இல்லாமல் வேறு மாற்று முறைகளை அவர்கள் உருவாக்க வேண்டும். ஒரு தகவல் அது அனுப்பும் முறையைப் பொறுத்தே இருக்கிறது, அது எல்லாம் இயல்பாக இருப்பது போலவே சொல்கிறார்கள்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.