பணத்தை விட கதையே முக்கியம் - ஈஷா ரெப்பா | நானி படத்தை தமிழ், தெலுங்கில் இயக்கும் ஞானவேல் | விஜய் பிறந்தநாளில் 69 வது படத்தின் அறிவிப்பு வெளியாகிறது | ஸ்டார் படத்தில் பத்து பாடல்கள் | வாடிவாசல், புறநானூறு படங்கள் உருவாகுமா? - சூர்யா சொன்ன தகவல் | தமிழுக்கு வரும் ஆதியா பிரசாத் | மீண்டும் இணைந்த 'ஜோ' ஜோடி | காந்தியின் வாழ்க்கை தொடரில் இணைந்த ஹாலிவுட் நடிகர்கள் | கமல் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் லிங்குசாமி புகார் | ‛கூலி'க்கு இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் : ரஜினி கருத்து |
"யுத்தம் செய், முகமூடி, ஆரோகணம் போன்ற படங்களுக்கு இசை அமைத்துள்ளவர், இளம் இசை அமைப்பாளர் கே. "நீங்கள் இசை அமைக்கும் படங்கள், ஒரே மாதிரியான கதைக் களம் கொண்டதாக உள்ளதே என, இவரிடம் கேட்டபோது, "உண்மைதான், இது வரை வந்த படங்கள் ஒரு குறிப்பிட்ட சூழலை மையப்படுத்தும் கதைக் களமாக இருந்தன. ஆனால், தற்போது இசை அமைத்து வரும், "ஒன்பதில் குரு என்ற படம், முற்றிலும் வேறுபட்ட கதைக் களத்தை கொண்டது. காரணம், இந்த படம் முழுக்க, காமெடி கொடி கட்டி பறக்கிறது. இந்த படத்துக்கு இசை அமைப்பது, பெரும் சவாலாக உள்ளது. பாடல்களுக்கு இடையில் வசனங்களை சேர்த்து, கொஞ்சம் புதுசா, ஒரு பாட்டுக்கு இசை அமைக்கப் போகிறேன். எந்த ஒரு இசை அமைப்பாளருக்கும், கொஞ்சம் வித்தியாசமான கதைகள் கிடைத்தால் தான், இசை அமைப்பாளர்களின் திறமை, முழுமையாக வெளிப்படும் என்கிறார், கே.