விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | இன்ஸ்டா கணக்கை டெலிட் செய்தாரா யுவன்? | அதிக எதிர்பார்ப்பில் வெளியாகும் வீட்டுக்கு வீடு வாசப்படி சீரியல்! | மிஸ்டர் மனைவி சீரியலில் என்ட்ரி கொடுக்கும் தேப்ஜானி மோடக் | இளையராஜா எல்லோருக்கும் மேலானவர் இல்லை : ஐகோர்ட் கருத்து | இசை ஆல்பத்தில் அஞ்சு குரியன் |
நாடோடிகள் படத்திற்கு பிறகு சசிகுமாருக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது சுந்தர பாண்டியன் தான். அவருக்கு மட்டுமல்ல அந்தபடத்தின் இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரனையும் நன்கு வெளிச்சம் போட்டு காட்டியது.. ஆனால் அதன் பின் எஸ்.ஆர்.பிரபாகரன் டைரக்சனில் வெளியான இது கதிர்வேலன் காதல், சத்ரியன் இரண்டும் பெரிய அளவில் போகவில்லை.
இந்தநிலையில் சசிகுமாரும் எஸ்.ஆர்.பிரபாகரனும் தற்போது மீண்டும் 'கொம்பு வச்ச சிங்கம்டா' என்கிற படத்தில் இணைந்துள்ளார்கள். இதற்கான டைட்டில் போஸ்டர் சமீபத்தில் சூர்யாவால் வெளியிடப்பட்டது. தற்போது இந்தப்படத்தின் கதாநாயகியாக மடோனா செபாஸ்டியன் நடிக்க உள்ளார் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.
ஜுங்கா ரிலீசை தொடார்ந்து தமிழ், மலையாளம் எதிலும் படவாய்ப்புகள் இல்லாத மடோனா, கன்னடத்தில் கோட்டிகோபாலு-2 என்கிற படத்தில் மட்டும் நடித்து வருகிறார்.