பாலிவுட்டின் மூத்த நடிகை காமினி கவுசல் காலமானார் | குடும்பங்கள் கொண்டாடிய படங்களின் இயக்குனர் வி சேகர் காலமானார் | கும்கி 2 படத்தை வெளியிட அனுமதி | பல ஹீரோக்கள் இதை விரும்பமாட்டார்கள் - ஆண்ட்ரியா | ராஷ்மிகாவுக்கு தேசிய விருது நிச்சயம் : தேவிஸ்ரீ பிரசாத் நம்பிக்கை | பெங்களூர் டேஸ் படத்தை ரீமேக் செய்து கெடுத்து விட்டோம் : ராணா | தமிழுக்கு வந்த காந்தாரா 2 பட வில்லன் | அஜித்தை நேரில் சந்தித்த சூரியின் நெகிழ்ச்சி பதிவு | மனைவி ஆர்த்தியின் பிறந்தநாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் | மகிழ்திருமேனியின் அடுத்த படம் குறித்து தகவல் இதோ |

நாடோடிகள் படத்திற்கு பிறகு சசிகுமாருக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது சுந்தர பாண்டியன் தான். அவருக்கு மட்டுமல்ல அந்தபடத்தின் இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரனையும் நன்கு வெளிச்சம் போட்டு காட்டியது.. ஆனால் அதன் பின் எஸ்.ஆர்.பிரபாகரன் டைரக்சனில் வெளியான இது கதிர்வேலன் காதல், சத்ரியன் இரண்டும் பெரிய அளவில் போகவில்லை.
இந்தநிலையில் சசிகுமாரும் எஸ்.ஆர்.பிரபாகரனும் தற்போது மீண்டும் 'கொம்பு வச்ச சிங்கம்டா' என்கிற படத்தில் இணைந்துள்ளார்கள். இதற்கான டைட்டில் போஸ்டர் சமீபத்தில் சூர்யாவால் வெளியிடப்பட்டது. தற்போது இந்தப்படத்தின் கதாநாயகியாக மடோனா செபாஸ்டியன் நடிக்க உள்ளார் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.
ஜுங்கா ரிலீசை தொடார்ந்து தமிழ், மலையாளம் எதிலும் படவாய்ப்புகள் இல்லாத மடோனா, கன்னடத்தில் கோட்டிகோபாலு-2 என்கிற படத்தில் மட்டும் நடித்து வருகிறார்.




