ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கடந்த 2014ல் மலையாளத்தில் வெளியான 'இதிகாசா' படம் மிகப்பெரிய வெற்றிபெற்றது. மிகப்பெரிய அறிமுகமில்லாத நடிகர்களை வைத்து அறிமுக இயக்குனர் பினு இயக்கிய இந்தப்படம் வெற்றி பெற்றதற்கு காரணம் இந்தப்படத்தின் வித்தியாசமான கதை தான்.
புராண காலத்தில் இருந்த இரண்டு மாய மோதிரங்கள் நிகழ்காலத்தில் ஒரே நேரத்தில் முன்பின் அறிமுகமில்லாத ஒரு ஆண் மற்றும் ஒரு பெண்ணின் விரல்களுக்கு வந்து சேர்கிறது. மோதிரத்தின் சக்தியால், இருவருக்குமான ஆண், பெண் தன்மை மட்டும் இடம் மாறிவிடுகிறது. அதன்பின் நிகழும் குழப்பங்களை சுவாரஸ்யமாக படமாக்கி இருந்தார்கள்.
இந்தப்படம் வெளியாகி இன்றுடன் நான்கு ஆண்டுகள் முடிந்த நிலையில் இதன் இரண்டாம் பாகத்திற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார் இயக்குனர் பினு. முதல் பாகத்தில் அறிமுக நடிகர் டாம் சாக்கோ நடித்திருந்த நிலையில் இந்த இரண்டாம் பாகத்தில் கதாநாயகனாக நடிகர் இந்திரஜித் நடிக்கிறார். இவர் அடுத்து தமிழில் வெளியாக உள்ள நரகாசூரன் படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.