மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? |
சென்னை : தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக, போலீசாரை அவதுாறாக பேசி பிரபலமானவர் 'டிவி' நடிகை நிலானி. இவரும் திருவண்ணாமலையை சேர்ந்த உதவி இயக்குநரான காந்தி லலித் குமாரும் காதலித்து வந்தனர். திருமணம் செய்ய இருந்த நிலையில் திடீரென நிலானி மறுத்ததாக தெரிகிறது. அதனால் மனமுடைந்த லலித்குமார் சில தினங்களுக்கு முன்னர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
லலித்தின் தற்கொலைக்கு நிலானி தான் காரணம் என லலித்தின் சகோதரர் குற்றம் சாட்டியிருந்தார். நிலானியோ, லலித்குமாருக்கு பல பெண்களுடன் பழக்கம் இருப்பதாகவும், பல பெண்களை ஏமாற்றி இருப்பதாகவும் செய்தியாளர்களிடம் கண்ணீர் மல்க பேட்டியளித்தார்.
சென்னை ஆலப்பாக்கத்தில் வசித்து வந்த நிலானி, இன்று நண்பகலில் திடீரென கொசு மருந்தை அருந்தி தற்கொலை முயற்சி மேற்கொண்டார். வீட்டில் மயங்கி கிடந்த நிலானியை போலீஸின் உதவியோடு மீட்ட அக்கம் பக்கத்தினர், அவரை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.