வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது |
கேரளாவில் ஏற்பட்ட பெரும் வெள்ளப் பெருக்கால் அந்த மாநிலம் கடும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது. பல தரப்பிலிருந்தும் கேரள அரசுக்கு நிதி வழங்கி வருகிறார்கள். தமிழ் நடிகர்களே கோடி கணக்கில் நிதி கொடுக்கும்போது மலையாள நடிகர்கள் சில லட்சங்களே கொடுத்துள்ளனர் என்ற விமர்சனம் கேரளாவில் பரவலாக எழுந்துள்ளது. இதுகுறித்து வெளிப்படையாக பேசி உள்ளார் பழம்பெரும் மலையாள நடிகை ஷீலா. அவர் கூறியிருப்பதாவது:
கேரளாவில் வெள்ளத்தால் மக்கள் வீடுகளையும் உடமைகளையும் இழந்து நிற்கிறார்கள். ஆனால் மலையாள நடிகர்கள் வெள்ள நிவாரணத்துக்கு குறைவான தொகையை வழங்கி உள்ளனர். முன்னணி மலையாள நடிகர்கள் பயன்படுத்தும் கார்களின் விலை ரூ.4 கோடி. கோடி கணக்கில் சம்பளம் வாங்குகிறார்கள். ஆனால் அவர்கள் வெள்ள நிவாரணத்துக்கு வழங்கிய தொகை சில லட்சங்கள் தான் என்பது வேதனையாக இருக்கிறது.
கேரள அரசு ஊழியர்கள் ஒரு மாத சம்பளத்தை வெள்ள நிவாரணத்துக்கு கொடுக்கிறார்கள். அவர்களை ஒப்பிடும்போது நடிகர்கள் ஒரு படத்துக்கு வாங்கும் சம்பளத்தை வெள்ள நிவாரணத்துக்கு கொடுக்க வேண்டாமா?. உங்களுக்கு பெயர், புகழ், பணம் எல்லாவற்றையும் கொடுத்தது ரசிகர்கள் தான். அவர்கள் கொடுத்த பணத்தில் தான் சொகுசாக வாழ்கிறீர்கள். இப்போது அந்த மக்கள் வீதியில் நிற்கும்போது நடிகர்கள் அதிக நிதி கொடுத்து உதவி செய்து அவர்கள் பக்கம் நிற்பது தான் நியாயம்.
இவ்வாறு ஷீலா கூறியுள்ளார்.