ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
தேவர் மகன் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நீலிமா ராணி, அதன்பிறகு பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக, குமரியாக நடித்தார். சின்னத்திரைக்கு வந்தவர் இங்கும் ஏராளமான சீரியல்களில் நடித்து சீரியல் தயாரிப்பாளராகவும் ஆனார். தலையணை பூக்கள், தாமரை தொடர்களில் நடித்தார். தற்போது அவர் நடித்து வரும் வாணி ராணி சீரியலும் நிறைவடைய இருக்கிறது.
அடுத்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் அன்னக்கிளி சீரியலில் வில்லி அவதாரம் எடுக்க இருக்கிறார். ஜீ தமிழ் தொலைக்காட்சிக்கு தனது கணவர் இசையுடன் இணைந்து நிறம் மாறாத பூக்கள் தொடரை தயாரித்தவர் இப்போது விஜய் டி.விக்காக அன்னக்கிளி தொடரை தயாரிக்கிறார்.
தனது முதல் தயாரிப்பான நிறம் மாறாத பூக்களில் நடிக்காத நீலிமா ராணி, அன்னக்கிளியில் வில்லியாக நடிக்க இருக்கிறார். இதுவரை சீரியல்களில் வராத துர்கா என்ற டெரர் வில்லியாக நடிக்க இருக்கிறார். இந்த மாத இறுதியில் படப்பிடிப்பு தொடங்குகிறது. அடுத்த மாதம் முதல் ஒளிபரப்பாக இருக்கிறது.