மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
கேரளாவில் இதுவரை நடிகர் மம்முட்டி மற்றும் மஞ்சு வாரியர் மட்டுமே வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறி வந்துள்ளனர். மற்ற திரையுலக பிரபலங்கள் நேரில் சொல்லாவிட்டாலும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி உதவி அளித்து வருகிறார்கள். தற்போது நடிகர் ஜெயசூர்யாவும் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார்.
எர்ணாகுளம் மற்றும் ஆலுவா பகுதிகளில் உள்ள வெள்ள நிவாரண முகாம்களுக்கு நேரில் சென்ற ஜெயசூர்யா அரிசி, உட்பட சில அத்தியாவசிய பொருட்களை அவர்களுக்கு வழங்கியுள்ளார்.
மேலும் இதுபற்றி அவர்கூறும்போது, இன்னும் 10-15 நாட்களில் நிலைமை ஓரளவு சரியாகிவிடும்.. அதன்பின் மீடியாக்கள் இவர்களை மறந்துவிட்டு அடுத்த வேலைகளுக்கு சென்று விடுவார். அப்போது இவர்களுக்கு இன்னும் உதவி தேவைப்படும்.. அந்தசமயத்தில் மீண்டும் மக்களுக்காக நேரில் வருவேன்" என கூறியுள்ளார் ஜெயசூர்யா.