ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
துல்கர் சல்மான் தற்போது மலையாளத்தில் ஒரு யமண்டன் பிரேமகதா என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்தப்படத்தில் பெயிண்டர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் துல்கர். அறிமுக இயக்குனரான நவ்பல் என்பவர் இயக்கும் இந்தப்படத்திற்காக இசையமைப்பாளராக அவதாரம் எடுத்துள்ளார் நடிகர் திலீப்பின் நண்பரும் பிரபல இயக்குனருமான நாதிர்ஷா.
தற்போது, தமிழில் தனுஷ் தயாரிப்பில் அஜித் ப்ரம் அருப்புக்கோட்டை என்கிற படத்தை இயக்கி வரும் நாதிர்ஷா, ஏற்கனவே மலையாளத்தில் அமர் அக்பர் அந்தோணி, கட்டப்பனையிலே ரித்விக் ரோஷன் என இரண்டு சூப்பர்ஹிட் படங்களை இயக்கியவர்..
இயக்குனர் என்றாலும் அடிப்படையில் இசையில் நன்கு தேர்ச்சி பெற்றுள்ள நாதிர்ஷா, துல்கர் படத்திற்கு இசையமைக்க ஒப்புக்கொண்டது அந்தப்படத்தின் கதாசிரியர்கள் பிபின் ஜார்ஜ் மற்றும் விஷ்ணு உன்னிகிருஷ்ணன் ஆகியோரின் வேண்டுகோளுக்காகத் தான். ஆம். நாதிர்ஷாவின் முந்தைய இரண்டு படங்களின் வெற்றிக்கு வித்திட்டவர்கள் இந்த இரட்டை கதாசிரியர்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது.