மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
மலையாளத்தில் சமீபத்தில் வெளியாகியுள்ள 'ஞான் மேரிக்குட்டி' என்கிற படத்தில் நடிகர் ஜெயசூர்யா திருநங்கை கேரக்டரில் நடித்திருக்கிறார். ஜெயசூர்யாவை வைத்து தொடர்ந்து படங்களை இயக்கிவரும் இயக்குனரான ரஞ்சித் சங்கர் தான் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். ஜெயசூர்யாவின் திருநங்கை கதாபாத்திரத்திற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
இந்தநிலையில் திருநங்கைகள் சிலருடன் கொச்சியில் மெட்ரோ ரயிலில் பயணம் செய்தார் ஜெயசூர்யா. அப்போது உடன் பயணம் செய்த கேரளாவை சேர்ந்த சுல்பி மெஹர்ஜான் என்கிற திருநங்கைக்கு ஜெயசூர்யா கவுன்சிலிங் கொடுத்தார் முடிவில் அந்த திருநங்கை பெண்ணாக மாற பாலினமாற்று அறுவை சிகிச்சை செய்துகொள்ள சம்மதித்தார். அவரது இந்த முடிவிற்கு மனப்பூர்வமாக சம்மதிப்பதாக அவருடைய பெற்றோர்களும் தங்கள் ஆதரவை ஜெயசூர்யாவிடம் தெரிவித்தார்கள்.